tag:blogger.com,1999:blog-238539842024-03-11T12:50:48.926+05:30தமிழ் சிறுகதைசிறுகதைEsha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-23853984.post-24480953183965598632017-09-07T13:19:00.000+05:302017-09-07T13:19:15.291+05:30காவல்காரன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ5ZsN4pRVQFyiV3bVKn7dbzNDjujM901ylAjpAwiqS-fLfVcocZ4tYXmk3HnH6p-UN-H7G6n91gb2BFSBhXOinpMoc4YG7vPGSamGf_qdv3dJJINpVOckkVadU-jQ0fuDQQJQ/s1600/security.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="176" data-original-width="318" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ5ZsN4pRVQFyiV3bVKn7dbzNDjujM901ylAjpAwiqS-fLfVcocZ4tYXmk3HnH6p-UN-H7G6n91gb2BFSBhXOinpMoc4YG7vPGSamGf_qdv3dJJINpVOckkVadU-jQ0fuDQQJQ/s1600/security.jpeg" /></a></div>
<div style="text-align: justify;">
பஞ்சமி நாட்டின் மன்னர் பஞ்சோபகேசன். இவர் புதிதாக அமைத்த அழகிய தென்னந் தோப்பைக் காவல் காக்க, பொறுப்பான ஆள் தேவை. அந்த வேலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசனை செய்தார். அப்போது அவனுக்கு, விவேகன் நினைவு வந்தது. அரசவை கோமாளியான அவன் அங்கும், இங்கும் சுற்றி வருகிறான். எந்த வேலையும் செய்வது இல்லை. அவனுக்கு இந்த வேலையை கொடுப்பது என்று முடிவு செய்தார்.</div>
<div style="text-align: justify;">
<br />""இந்த நிலத்தில் தென்னங்கன்றுகள் நடப் போகிறோம். இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. இந்தக் கன்றுகளை இரவிலும், பகலிலும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக நடந்து கொள்,'' என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br />""அரசே! நீங்கள் சொன்னது போலவே நடந்து கொள்வேன்,'' என்றான் விவேகன்.</div>
<div style="text-align: justify;">
<br />அங்கே தென்னங்கன்றுகள் நடப்பட்டன. அவற்றிற்கு காவல் இருக்கத் தொடங்கினான் விவேகன்.</div>
<div style="text-align: justify;">
<br />பகல் வேளையில், அவற்றைப் பார்த்துக் கொள்வது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இரவு வந்தது. வீடு செல்ல வேண்டும். தென்னங்கன்றுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தான். நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது.</div>
<div style="text-align: justify;">
<br />தென்னங்கன்றுகளை எல்லாம் பிடுங்கி, ஒன்றாகக் கட்டினான். அவற்றைத் தூக்கி கொண்டு, தன் வீட்டிற்கு வந்தான். தன் கண் பார்வையிலேயே அவற்றை வைத்திருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br />பொழுது விடிந்தது. அந்தக் கன்றுகளைத் தூக்கிக் கொண்டு நிலத்திற்கு வந்தான். முன்பு இருந்தது போலவே அவற்றை நட்டு வைத்தான். பொழுது சாய்ந்ததும் அவற்றைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு, தன் வீட்டிற்குச் சென்றான். இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது.<br />ஒரு வாரம் சென்றது-</div>
<div style="text-align: justify;">
<br />தென்னங்கன்றுகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக அரசர் அங்கு வந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br />தென்னங்கன்றுகள் அனைத்தும் வாடிக்கிடப்பதைப் பார்த்தார்.</div>
<div style="text-align: justify;">
<br />கோபம் கொண்ட அவர், ""நீ பொறுப்பாகத் தென்னந்தோப்பைக் காவல் காப்பாய் என்று உன் பொறுப்பில் விட்டேன். எல்லாக் கன்றுகளும் வாடிக் கிடக்கின்றன. என்ன செய்தாய்?'' என்று கத்தினார்.</div>
<div style="text-align: justify;">
<br />""அரசே! நீங்கள்தான் இவற்றைப் பகலிலும், இரவிலும் நான் காவல் காக்க வேண்டும் என்றீர்கள். இரவில் நான் இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று பாதுகாத்தேன். பகலில் மீண்டும் இவற்றை இங்கே நட்டேன். நீங்கள் சொன்னது போலவே நடந்து கொண்டேன். இவை ஏன் வாடி விட்டன! என்று எனக்கும் தெரியவில்லை,'' என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br />இதைக் கேட்ட அரசர், "இவனிடம் போய் இந்த வேலையை கொடுத்தோமே...' என்று தலையில் அடித்துக் கொண்டார்.</div>
<div style="text-align: justify;">
<br />"அப்பாடா! தப்பித்தோம்!' என, பெருமூச்சு விட்டான் விவேகன்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றி சிறுவர்மலர்</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-23853984.post-3206252870838549012017-08-30T13:51:00.000+05:302017-08-30T13:51:17.099+05:30பச்சை பச்சையாய்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFqI8TJznimOacPNPUWeJuHv1Z4NA5avUR-qSqp4eVlBG6uzhQPVvTDRCXeflxV_zCnwy_Ug4w_IUgSa5ZPblsNhGIhBPZ3gcKxW9OoW9p6JwecruB9AQvcyUtAuKvIMXrSCMD/s1600/green+green+goat+story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="392" data-original-width="300" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFqI8TJznimOacPNPUWeJuHv1Z4NA5avUR-qSqp4eVlBG6uzhQPVvTDRCXeflxV_zCnwy_Ug4w_IUgSa5ZPblsNhGIhBPZ3gcKxW9OoW9p6JwecruB9AQvcyUtAuKvIMXrSCMD/s320/green+green+goat+story.jpeg" width="244" /></a></div>
<div style="text-align: justify;">
ஆட்டுக்குட்டி ஒன்று காட்டில் மேய்ந்து கொண்டு இருந்தது. பசுமையான இலை, கொடிகள் கண்ட இடங்களில் எல்லாம், தம் விருப்பம் போல் ஆசையுடன் மேய்ந்தது.</div>
<div style="text-align: justify;">
<br />சிறிது நேரத்தில் ஆட்டுக் குட்டிக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. சுற்றிலும் கிணறு இருந்தது. ஆனால் எங்கும் தண்ணீர் கிடைக்க வில்லை. தாகம் மிகவும் வாட்டி வதைத்தது.</div>
<div style="text-align: justify;">
<br />இன்னும் சிறிது தூரம் தள்ளிச் சென்று பார்த்தது. ஓர் இடத்தில் பெரிய கிணறு இருந்தது. கிணற்றுச் சுவரின் மேல் ஏறி உள்ளே எட்டிப் பார்த்தது.கிணற்றின் உள்ளே சிறிது தண்ணீர் இருந்தது. சுவற்றின் ஓரத்தில் பசுமையான புற்களும் வளர்ந்திருந்தன. அதைக் கண்டவுடன் ஆட்டுக்குட்டி நமக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைத்து விட்டதே என நினைத்து, அத்துடன் தண்ணீரைச் சுற்றி இருக்கும் பசுமையான புல்லையும் சாப்பிடலாம் என எண்ணி மகிழ்ந்தது.</div>
<div style="text-align: justify;">
<br />கிணற்றின் உள்ளே ஓரமாக படியும் இருந்தது. அதன் வழியே மெதுவாக கீழே இறங்கிவிட்டது. பசுமையான புல்லை மேய்ந்து, தண்ணீரும் குடித்தது. கிணற்றின் அடிப்பகுதிக்கு சென்றது. சரி இனிமேல் மேலே செல்லலாம் என முயற்சி செய்து படிகளில் ஏறப் பார்த்தது. பாவம், அதனால் ஏற முடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br />படிகளின் இடைவெளி அதிகமாகவும், உயரமாகவும் இருந்ததால் அதன் முன் கால்களை வைத்து மேலே ஏற முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் கீழேயே விழுந்து விட்டது.</div>
<div style="text-align: justify;">
<br />அதனால் கிணற்றின் மேலே ஏறிவர முடியவில்லையே என எண்ணி மிகவும் வேதனை அடைந்தது. தன் நிலையை நினைத்து, உள்ளே நின்று கத்திக் கொண்டே இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br />அந்த வழியே ஒரு குரங்கு வந்தது. கிணற்றுக்குள் இருந்து ஆடு கத்தும் சத்தம் குரங்கின் காதில் விழுந்தது.</div>
<div style="text-align: justify;">
<br />"கிணற்றுக்குள் இருந்து தானே ஆட்டின் சப்தம் வருகிறது' என நினைத்த குரங்கு, கிணற்றில் எட்டிப் பார்த்தது. கிணற்றின் உள்ளே ஆட்டுக் குட்டியைப் பார்த்ததும், ""எப்படி உள்ளே குதித்தாய்?'' எனக் கேட்டது.</div>
<div style="text-align: justify;">
<br />""தண்ணீர் குடிக்கத்தான் இப்படி கிணற்றுக்குள் இறங்கினேன். ஆனால், மீண்டும் என்னால் ஏறி வர முடியவில்லை.''</div>
<div style="text-align: justify;">
<br />அதைக் கேட்ட குரங்கால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை, ஆட்டுக் குட்டியின் நிலை கண்டு பரிதாபப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br />""ஆட்டுக் குட்டியே... எந்தக் காரியத்தை செய்யும் முன், யோசித்த பின் செய்ய வேண்டும். ஆராயாமல் இப்படிச் செய்து விட்டு, சிரமப்படக் கூடாது. என்னாலும் உனக்கு உதவ முடியவில்லையே ... இருப்பினும் கிராமத்தினுள் சென்று துணைக்கு யாரையாவது அழைத்து வருகிறேன்...'' என்று கூறிச் சென்று விட்டது.<br /><br /><b>நீதி: கண்களுக்கு பார்த்ததும் அழகாக தோன்றுகின்ற எல்லாத்தையும் உடனே ஆசைபட்டுவிடக்கூடாது. அதைப்பற்றி நன்கு தெரிந்துகொண்டு தான் செயல்படணும். சரியா!</b></div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23853984.post-86198579648455741652017-08-14T09:41:00.000+05:302017-08-14T09:41:01.394+05:30 ஓநாயும், ஆட்டுக்குட்டியும் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNgxGkg4QHxWC3QPpR1VzeNb0vXbB0IGNOoBdQIocc7DAxuMat4jC-PKXnK8A01iI2VGsMApUVa2xSlgbdix-nMSWM9X6ROFAO2iqib1i1g_BPm0O4fWfO3lYim_xowWUZQw_p/s1600/foxandgoatstory.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="237" data-original-width="400" height="189" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNgxGkg4QHxWC3QPpR1VzeNb0vXbB0IGNOoBdQIocc7DAxuMat4jC-PKXnK8A01iI2VGsMApUVa2xSlgbdix-nMSWM9X6ROFAO2iqib1i1g_BPm0O4fWfO3lYim_xowWUZQw_p/s320/foxandgoatstory.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். ஓநாயை, ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை.<br /><br />அதைத்தான் இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய்.<br /><br />""ஏன் இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்?'' என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்த ஆட்டுக்குட்டி பயத்துடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியது.<br /><br />""நான் எப்படி நீரைக் கலக்க முடியும்? தாங்கள் குடித்த மீதி தானே கீழ்ப்புறம் வரும்!'' என்று மெல்லிய குரலில் கேட்டது.<br /><br />""பதில் பேசுமளவுக்குத் திமிராகி விட்டதா? நீ கலக்காவிடில் உங்கப்பன் கலக்கியிருப்பான்! உங்கப்பன் கலக்கா விட்டால், உன் பாட்டன் கலக்கியிருப்பான். உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது!'' என்றபடி ஓட முயன்ற ஆட்டுக்குட்டி மேல் பாய்ந்து அதை இரையாக்கிக் கொண்டது.<br /><br />துஷ்டர்களிடம் நியாயம் எடுபடாது. மவுனமாக ஒதுங்கிச் செல்வதே நன்மை தரும். காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படியும் பேசுவர். அவர்களிடம் எல்லாம் வாய் பேசாமல் செல்வதே நலம். </div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-23853984.post-40534264193121704062017-05-27T09:36:00.002+05:302017-05-27T09:38:09.980+05:30தேவதை கொடுத்த பரிசு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjz_9-f1e4lNVrK1WPlFbGVUGzRw4wBlUhXDRLQgB8sllviShzlgWAntmlJ-nvD4WVotSXfYiziY8B0jKqWdWvk230zlbwi4PCoknXcrIEyX_2G0NDrJTl2gjVz4XKP2S_41aDU/s1600/angel+gift+kids+story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="188" data-original-width="318" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjz_9-f1e4lNVrK1WPlFbGVUGzRw4wBlUhXDRLQgB8sllviShzlgWAntmlJ-nvD4WVotSXfYiziY8B0jKqWdWvk230zlbwi4PCoknXcrIEyX_2G0NDrJTl2gjVz4XKP2S_41aDU/s1600/angel+gift+kids+story.jpeg" /></a></div>
<div style="text-align: justify;">
நெல்லிக்குப்பம் என்ற கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் ஜெகதீஸ்; மற்றவன் பெயர் பிரகாஷ். இருவரும் தினமும் காலை நேரத்தில் கட்டு மரத்தில் ஏறி, மீன் பிடிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br />
ஒருநாள் காலை நேரத்தில் இருவரும் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br />
அன்றைய தினம் மாலை நேரம் ஆகியும் கூட இருவர் வலையிலும் போதுமான மீன்கள் சிக்கவில்லை; மிகக் குறைந்த அளவிலேயே மீன்கள் மாட்டின. கரையை அடைந்த இருவரும் தங்களுக்குக் கிடைத்த மீனைப் பங்கிட்டுப் பார்த்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br />
""நண்பனே, இந்த மீன்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் நம் இருவர் குடும்பத் திற்கும் போதிய உணவுப் பொருட்களை வாங்கிச் சமைப்பது கடினம். அதனால், மீன் விற்றுக் கிடைக்கும் பணத்தினை நம்மில் ஒருவரே எடுத்துக் கொள்ளலாம்,'' என்றான் பிரகாஷ்.</div>
<div style="text-align: justify;">
<br />
""அப்படியானால் நீயே எடுத்துக்கொள். நீதான் மனைவி, மக்களோடு இருக்கிறாய். உன் குடும்பத்தை வறுமையில் வாடவிடாதே.... நீயே எடுத்துக்கொள்,'' என்றான் ஜெகதீஸ்.</div>
<div style="text-align: justify;">
<br />
""இல்லை நண்பனே. உன் குடும்பத்தில் இரண்டு நபர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதனால் நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என்றான் பிரகாஷ்.</div>
<div style="text-align: justify;">
<br />
""இல்லை நண்பனே, இல்லை கண்டிப்பாக நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும். உன் குடும்பத்தை வறுமை யில் தவிக்க நான் என்றுமே விடமாட்டேன்,'' என்று அழுத்தமாகக் கூறினான் ஜெகதீஸ்.</div>
<div style="text-align: justify;">
<br />
பிரகாஷும், ஜெகதீஸும் ஒருவரையொருவர் இவ்வாறு விட்டுக் கொடுக்காமல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br />
அந்த நேரத்தில் திடீரென சத்தம் கேட்டது. இருவரும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர். அங்கே கடற்கரையில் ஓர் அழகிய பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br />
அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இருவரும் திகைப்புடன் வாயடைத்துப் போயினர். அந்தப் பெண் தேவதை போன்று காட்சி தந்தாள். அந்தப் பெண்ணின் முகத்தை இருவரும் உற்றுப் பார்த்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br />
""மீனவர்களே, என்ன அப்படிப் பார்க் கிறீர்கள்! நான்தான் இந்தக் கடலில் வசிக்கிற கடல் தேவதை. நீங்கள் இரு வரும் ஏதோ வழக்கு நடத்திக் கொண்டிருப் பது போன்று தெரிகிறது. அது என்ன வென்று அறிந்துகொள்ள வேண்டியே உங்கள் அருகில் வந்தேன்,'' என்றாள் கடல் தேவதை.</div>
<div style="text-align: justify;">
<br />
""தேவதையே! உன்னை சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இருவரும் பிடிக்கிற மீன்களை பங்கு போட்டுக் கொள்வோம். இப்போது எங்களுக்குக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ளன. என் குடும்பம் வறுமையில் வாடும், அதனால் மீன்களை எடுத்துக்கொள் என்கிறான் என் நண்பன்.</div>
<div style="text-align: justify;">
<br />
""என் குடும்பத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவன் குடும்பம் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காகத்தான் எல்லா மீன்களையும் விற்று கிடைக்கிற பணத்தை என் நண்பன் எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல் கிறேன். என் நண்பனோ, அதனை மறுத்து என்னை எடுத்துக்கொள்ளும் படியாகச் சொல்கிறான். நீயே அவனுக்கு எடுத்துக் கூறி அவன் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்று!'' என்றான் பிரகாஷ்.</div>
<div style="text-align: justify;">
<br />
கடல் தேவதையோ சிரித்தபடியே இருவரையும் நோக்கியது.</div>
<div style="text-align: justify;">
<br />
""நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் உங்கள் குடும்ப நலன் கருதியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குடும்பத் தின் மீதும் நீங்கள் வைத்திருக்கும் அன்பும், உங்கள் நல்லெண்ணமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் உங்கள் இரு வருக்கும் உதவி புரியவே வந்துள்ளேன்,'' என்றது கடல் தேவதை.</div>
<div style="text-align: justify;">
<br />
பிறகு, பிரகாஷ் முன்பும், ஜெகதீஸ் முன்பும் இரண்டு மூட்டைகள் தோன்றின. கடல் தேவதையும் அங்கிருந்து மறைந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br />
இருவரும் அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அந்த மூட்டைகளில் நிறையப் பொற்காசுகள் காணப்பட்டன.</div>
<div style="text-align: justify;">
<br />
இருவருமே அதனை தங்கள் ஒற்றுமைக்குக் கிடைத்த பரிசாகவே நினைத்துக் கொண்டனர். அதைக் கொண்டு பெரிய பணக் காரர்கள் ஆயினர்.<br />
<br />
***<br />
<br />
<div style="text-align: right;">
நன்றி தினமலர் சிறுவர்மலர் </div>
</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-23853984.post-25170694894940698472017-05-13T09:09:00.000+05:302017-05-13T09:14:38.499+05:30அட்வைஸ் பண்ணாதே!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivM5K-9z1ZBwCcZYlU_Nl65Jkhxlg8GMFUOXY1J2MdcAR8ITqOgAIQcXyPUEImPx83DWKjb3rSQqBJpqRbAIzVZzf41Gcd7v2fkcMxa2VzUn9wB_qw-uOvrbD6lmec1AlQji2a/s1600/dont+advice+kids+tamil+story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivM5K-9z1ZBwCcZYlU_Nl65Jkhxlg8GMFUOXY1J2MdcAR8ITqOgAIQcXyPUEImPx83DWKjb3rSQqBJpqRbAIzVZzf41Gcd7v2fkcMxa2VzUn9wB_qw-uOvrbD6lmec1AlQji2a/s1600/dont+advice+kids+tamil+story.jpeg" /></a></div>
<div style="text-align: justify;">
ஒரு மலை பிரதேசத்தில் குரங்குகள் கூட்டம் ஒன்று வசித்து வந்தது. கையில் கிடைத்ததை, பிடித்தால் உண்பதும், பிடிக்காவிட்டால் தூக்கி எறிவதும் குரங்குகளின் குணம். ஒரு சமயம் பயங்கர காற்றுடன் லேசான மழை பெய்தது. நடுங்கும் குளிர் மலை பிரதேசத்தை சுற்றி வசித்து வந்த ஜீவராசிகளை வாட்டி வதைத்தது.</div>
<div style="text-align: justify;">
<br />
குரங்குகள் குளிரால் நடுங்கி, "எங்கே சென்று குளிரை போக்கிக் கொள்வது' என்று யோசித்தன. அப்போது குரங்குகள் கூட்டத்தில் இருந்த ஒரு சிறிய குரங்கு, சற்று தூரத்தில் ஒரு மரத்தடியில் சிவப்பு நிற பூக்களை பார்த்து, அவை நெருப்பு குவியல் என்று நினைத்து தன் கூட்டத்தாரிடம், ""அங்கு சென்றால் குளிரை போக்கிக் கொள்ளலாம்,'' என்று கூறியது.</div>
<div style="text-align: justify;">
<br />
சிறிய குரங்கு கூறியதை கேட்ட மற்ற குரங்குகளும் மரத்தடிக்கு சென்று அங்கு குவியலாக கிடந்த மின்னும் சிவப்பு பூக்களை சுற்றி அமர்ந்து கொண்டு, தங்கள் இரு கைகளையும் தங்கள் தோள்களில் வைத்துக் கொண்டு நடுநடுங்கியபடி இருந்தன. முட்டாள் குரங்குகள் மின்னும் சிவப்பு பூக்களை நெருப்பு என்று நினைத்தன. மனிதர்கள் சில நேரங்களில், தங்கள் குளிரை போக்கிக்கொள்ள நெருப்பை சுற்றி அமர்ந்திருப்பர். நெருப்பு சிவப்பு நிறத்தில் இருப்பதை போல், மின்னும் பூக்களும் சிவப்பு நிறத்தில் இருந்ததால், பூக்களை நெருப்பு என்று நினைத்தன குரங்குகள்.</div>
<div style="text-align: justify;">
<br />
குரங்குகள் அமர்ந்திருந்த மரத்துக்கு மேலே ஒரு பறவை கூடு கட்டி தன் குடும்பத்தோடு வசித்து வந்தது. குரங்குகளின் நடவடிக்கைகளை நீண்ட நேரமாக கவனித்துக் கொண்டிருந்த பறவை, குரங்குகளை பார்த்து பரிதாபப்பட்டது. அது குரங்குகளில் மூத்த குரங்கை அழைத்து, ""குரங்கு அண்ணா! நீங்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. நீங்கள் எந்தப் பொருளை சுற்றி அமர்ந்திருக்கிறீர்களோ அது நீங்கள் நினைப்பது போல் நெருப்பு அல்ல... அது வெறும் மின்னும் சிவப்பு நிற பூக்கள்,'' என்றது பறவை.</div>
<div style="text-align: justify;">
<br />
பறவை சொல்வதை தன் காதில் வாங்காத குரங்குகளின் தலைவன், நடுங்கும் உடலோடு பேசாமல், மின்னும் சிவப்பு பூக்கள் முன்னால் உட்கார்ந்து விட்டது. நேரம் ஆக, ஆக குளிர் அதிகமாகி குரங்குகளுக்கு நடுக்கமும், உடலில் ஆட்டமும் கண்டது.</div>
<div style="text-align: justify;">
<br />
குரங்குகள் குளிரில் நடுங்குவதை கவனித்துக் கொண்டிருந்த பறவை மரத்தில் இருந்தபடியே மீண்டும் குரங்குகளை பார்த்து, ""சகோதரர்களே! உங்களுக்கு முன்னால் இருப்பது வெறும் மின்னும் சிவப்பு நிற பூக்கள், நெருப்பு அல்ல... பூக்களிடம் இருந்து உங்கள் குளிரை போக்க சூடு கிடைக்காது வெறும் வாசனைத்தான் கிடைக்கும். வானத்தில் கருமேக கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக் கிறது. எந்த நேரத்திலும் மழை பெய்ய நிறைய வாய்ப்புள்ளது. நேரத்தை வீணாக்காமல் நீங்கள் தற்போது வசித்து வரும் மலைக்கு அருகில் குகை ஏதாவது தென்பட்டால், அங்கே போய் தங்கிக் கொள்ளுங்கள்,'' என்றது பறவை.</div>
<div style="text-align: justify;">
<br />
பறவை தொடர்ந்து தங்களுக்கு அறிவுரை கூறுவதை கேட்ட குரங்குகள் கூட்டம் கோபம் கொண்டு பறவையை பார்த்து, ""பறவையே! எங்களுக்கு அறிவுரை கூறுவதை இத்துடன் நிறுத்திக்கொள். உனக்கு இரண்டு கால்கள் மட்டுமே தான் உள்ளது. ஆனால், எங்களுக்கோ இரண்டு கால்களும், இரண்டு கைகளும் உள்ளன. எங்களை காப்பாற்றிக் கொள்ள எங்களுக்கு தெரியும்,'' என்று கூட்டத்தில் இருந்த அத்தனை குரங்குகளும் போட்டி போட்டுக் கொண்டு, மாறி, மாறி பறவையை ஏளன பார்வையால் அவமானப்படுத்தின. குரங்குகளால் எவ்வளவு அவமானப்பட்டாலும் பறவைக்கு குரங்குகள் மேல் இருந்த அனுதாபம் குறையவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br />
அது குரங்குகளை பார்த்து, வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br />
""இந்த நிமிடமே நிறுத்திக் கொள்... நாங்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறோம். நீ தொடர்ந்து உபதேசம் செய்துக்கொண்டிருக் கிறாய். எங்கள் வேதனை உனக்கு புரியவில்லை,'' என்று கோபத்தோடு திட்டியது குரங்குகளின் மூத்த குரங்கு.</div>
<div style="text-align: justify;">
<br />
குரங்குகளின் மூத்த குரங்கு திட்டியதைப் பற்றி சற்றும் கவலைப்படாத பறவை, குரங்குகளை சீக்கிரமாக மரத்தடியை விட்டு விரைவில் ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு நயமாக கூறியது. குரங்குகளின் தலைவனும் பறவையும் பேசிக் கொண்டிருக்கும்போதே, வயதில் சிறிய குரங்கு ஒன்று, பறவை வசித்து வந்த மரத்தின் மீது மளமளவென ஏறி பறவையை பிடித்து, அதன் இறகுகளை பிய்த்து எறிந்து, பறவையை தூக்கி வீசியது.</div>
<div style="text-align: justify;">
<br />
பறவையின் அறிவுரையை சற்றும் பொருட்படுத்தாத குரங்குகள், மின்னும் சிவப்பு பூக்கள் முன்னால் அமர்ந்தபடியே குளிரில் நடுங்கி, சில குரங்குகள் மாண்டன. சில குரங்குகள் நோய் வாய்ப்பட்டன. சில குரங்குகள் பறவை சொல்லை கேட்டு, மலைக்கு அருகில் இருந்த குகையில் தங்கி உயிர் பிழைத்தன.</div>
<div style="text-align: justify;">
<br />
இறகுகளை இழந்த பறவையும் தன் அறிவுரையை கேட்டு, சில குரங்குகளாவது உயிர் பிழைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தது. ஆனாலும் முட்டாள்களுக்கு அறிவுரை கூறினால் அது தனக்கே ஆபத்தாக முடியும் என்ற உண்மையை புரிந்து கொண்டது.<br />
***<br />
<br />
<div style="text-align: right;">
நன்றி தினமலர் சிறுவர்மலர் </div>
</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23853984.post-39525297281886081762017-05-09T22:51:00.000+05:302017-05-13T09:10:22.559+05:30நான் தான் அழகி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAYYsECOa4wjmlbWt_vkQZHja43TPu7zjb0hRbXSFMiUPec7sbKfItJWYBj1XmXz8hs9gb3c2uMJifQKflaaJ1pD15k20aF27NojkoE9QT1X522_WhGufavfGax2LlH3GMZqaS/s1600/beautiful+girl+tamil+story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAYYsECOa4wjmlbWt_vkQZHja43TPu7zjb0hRbXSFMiUPec7sbKfItJWYBj1XmXz8hs9gb3c2uMJifQKflaaJ1pD15k20aF27NojkoE9QT1X522_WhGufavfGax2LlH3GMZqaS/s1600/beautiful+girl+tamil+story.jpeg" /></a></div>
<div style="text-align: justify;">
ஒரு சிறிய கிராமம் ஒன்றில் தியாகு என்ற தச்சன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சர்மிளா.</div>
<div style="text-align: justify;">
<br />
தியாகு ஏழையாக இருந்தாலும் சிறந்த உழைப்பாளி. அவன் அவ்வப்போது அருகி லுள்ள காட்டிற்குச் சென்று நன்கு விளைந்த மரங்களை வெட்டி வருவான். அம்மரங் களில் அழகான மேசை, நாற்காலி போன்ற வற்றை உருவாக்கி, அருகிலுள்ள ஊர்களில் விற்று வருவான்.</div>
<div style="text-align: justify;">
<br />
தியாகு மிக எளிமையான மனிதனாக இருந்தாலும், அவனது மனைவி சர்மிளா அவனுக்கு எதிர்மாறாக இருந்தாள். அவள் வீட்டு வேலைகளைக் கூட சரியாகக் கவனிக்க மாட்டாள். எப்போதும் முகம் பார்க்கும் கண்ணாடி முன்னே அமர்ந்து தன்னை அலங்கரித்துக் கொண்டிருப்பாள். தன்னை எல்லாரும், "அழகி' என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் அவள்.</div>
<div style="text-align: justify;">
<br />
ஒருநாள் வழக்கம்போல், தியாகு காட்டிற்கு மரம் வெட்டச் சென்றான். அவனது உழைப்பை அறிந்த வனதேவதை அவன் முன்னே தோன்றி, ""மகனே! நீ இத்தனைக் காலம் உழைத்து வருவதை நான் அறிவேன். நான் உனக்கும், உன் மனை விக்கும் மூன்று வரங்கள் தருகிறேன். இவ்வரத்தின் மூலம் நீ உன் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். மூன்று முறை மட்டுமே நீ சொல்வது பலிக்கும்!'' என்று கூறிவிட்டு மறைந்தது.<br />
வரம் பெற்ற தியாகுவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை. "அவன் அவ்வரங்களின் மூலம் தன் வாழ்க்கைக்குத் தேவையான வற்றைப் பெற நினைத்தான். இருப்பினும் தன் மனைவியின் ஆலோசனைகளைக் கேட்கலாம்' என்று நினைத்து நேராகத் தன் வீட்டிற்கு ஓடினான்.</div>
<div style="text-align: justify;">
<br />
வீட்டிற்குச் சென்ற தியாகு, தன் மனைவி சர்மிளாவிடம் தான் வரம் பெற்ற செய்தியை மகிழ்ச்சியுடன் கூறினான். பிறகு என்னென்ன கேட்கலாம் என்று ஆலோசனையும் கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br />
சர்மிளா அலங்கார விரும்பி அல்லவா? அவள் உடனே, ""முதல் வரமாக நான் இந்த நாட்டிலேயே மிகச்சிறந்த அழகியாக மாறுவதற்கான வரம் கேட்கப் போகிறேன்!'' என்று கூறினாள்.</div>
<div style="text-align: justify;">
<br />
தியாகுவிற்கு தன் மனைவியின் யோசனை பிடிக்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br />
""வேண்டாம் சர்மிளா! நாம் நம் வாழ் நாளுக்குத் தேவையான செல்வங்களைக் கேட்கலாம்!'' என்று கூறினான்.</div>
<div style="text-align: justify;">
<br />
சர்மிளா கணவனின் யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. அவள் தன் விருப்பத்திலேயே பிடிவாதமாக இருந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br />
அவள், ""நான் இந்நாட்டின் மிகச்சிறந்த அழகியாக மாற வேண்டும்!'' என்று வேண்டிக் கொண்டாள். மறுநிமிடமே அவள் மிகச்சிறந்த அழகியாக உருமாறினாள்.</div>
<div style="text-align: justify;">
<br />
சர்மிளாவின் செய்கை தியாகுவிற்கு கோபத்தை வரவழைத்தது.</div>
<div style="text-align: justify;">
<br />
""சர்மிளா உனக்கு அறிவில்லையா? ஒரு வரத்தை வீணாக்கி விட்டாயே!'' என்று அவளைத் திட்டினான்.</div>
<div style="text-align: justify;">
<br />
கணவன் தன்னைத் திட்டியதைக் கேட்ட சர்மிளாவிற்கு கோபம் வந்தது.</div>
<div style="text-align: justify;">
<br />
அவள் தியாகுவிடம், ""இனி நான் இங்கு இருக்க மாட்டேன். நான் என் தாய், தந்தையுடன் சென்று வசிக்கப் போகிறேன்!'' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br />
தன் மனைவி தன்னைவிட்டுச் செல்வதைக் கண்ட தியாகுவிற்கு மனதில் வருத்தம் தோன்றியது. அவன் தன் மனைவியை சமாதானம் செய்ய அவள் பின்னாலேயே சென்றான். ஆனால், அவளோ கணவின் பேச்சைக் கேட்காமல் தாய் வீடு இருக்கும் அடுத்த ஊரை நோக்கி நடைபோட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br />
அவ்வேளையில் அந்நாட்டு அரசன் தன் பரிவாரங்களுடன் யானை மீது அவ் வழியே வந்து கொண்டிருந்தார். அரசர் அவ்வழியே சென்ற சர்மிளாவைக் கண்டார். அந்நாட்டில் அவளைப் போல ஒரு அழகியைக் கண்டதே இல்லை.<br />
எனவே அரசருக்கு சர்மிளாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அவர் தன் படைவீரர் களை அழைத்து, சர்மிளாவை இழுத்து வரும்படி உத்தரவிட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br />
படைவீரர்களும் சர்மிளாவை நோக்கி விரைந்தனர். அவர்கள் சர்மிளாவின் கைகளைப் பிடித்து அரசரிடம் இழுத்துச் சென்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br />
சர்மிளாவிற்கோ அழுகை வந்தது.</div>
<div style="text-align: justify;">
<br />
"கணவனிடம் கோபித்து இவ்வாறு படை வீரர்களிடம் மாட்டிக் கொண்டோமே' என்று எண்ணி வருந்தினாள். படைவீரர்களிடம் தன்னை விட்டுவிடுமாறு கதறினாள். ஆனால், அவர்கள் அதற்கு சிறிதும் செவிசாய்க்க வில்லை.</div>
<div style="text-align: justify;">
<br />
நடந்தவை அனைத்தையும் தியாகு பார்த்துக் கொண்டுதான் இருந்தான். தன் மனைவியை படைவீரர்கள் இழுத்துச் செல்வதைக் கண்ட தியாகுவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br />
திடீரென்று அவனது மனதில் வன தேவதையின் வரம் நினைவிற்கு வந்தது. படைவீரர்களிடமிருந்து தன் மனைவியை விடுவிக்க ஒரே வழி இதுதான் என்று அவன் நினைத்தான்.</div>
<div style="text-align: justify;">
<br />
""இப்போது என் மனைவி ஒரு குரங்காக மாற வேண்டும்!'' என்று வனதேவதையை மனதில் நினைத்து வேண்டினான் தியாகு.</div>
<div style="text-align: justify;">
<br />
மறுநிமிடமே அவள் ஒரு குரங்காக மாறி விட்டாள். வனதேவதை தந்த இரண்டாவது வரமும் வீணாகிவிட்டது.</div>
<div style="text-align: justify;">
<br />
படைவீரர்கள் குரங்குடன் அரசரை நெருங்கினர். படைவீரர்கள் ஒரு குரங்கை இழுத்து வருவதைக் கண்ட அரசருக்குக் கடுமையான கோபம் வந்தது.</div>
<div style="text-align: justify;">
<br />
அவர், ""நான் அழகியை இழுத்து வரச் சொன்னேன். நீங்கள் ஒரு குரங்கை பிடித்து வந்திருக்கிறீர்களா?'' என்று கோபத்தோடு கேட்டார். அப்போதுதான் படைவீரர்கள் திரும்பிப் பார்த்தனர். அவர்கள் கையில் அகப்பட்டிருந்தது குரங்கு என்பது அவர் களுக்கும் தெரிந்தது.</div>
<div style="text-align: justify;">
<br />
குரங்கைக் கண்ட அதிர்ச்சியில் அவர்கள் கைகளை விடுவித்தனர். இதுதான் தக்க சமயம் என்று எண்ணிய குரங்கு அருகி லிருந்த காட்டுக்குள் ஓடித் தப்பியது.</div>
<div style="text-align: justify;">
<br />
தான் கண்ட அழகி எப்படியோ தப்பித்து விட்டாள் என்பதை அறிந்த அரசரும், தன் பரிவாரங்களுடன் வந்த வழியே சென்றார்.</div>
<div style="text-align: justify;">
<br />
தியாகுவிற்கோ இப்போது வேறு கவலை முளைத்தது. குரங்காய் மாறி காட்டுக்குள் ஓடிய தன் மனைவியை மீட்க வேண்டும் என்பதே அந்தக் கவலை!</div>
<div style="text-align: justify;">
<br />
அவன் மீண்டும் வனதேவதையை மனதில் நினைத்து, ""குரங்காய் மாறிய என் மனைவி மீண்டும் பெண் உருவில் என்னிடம் வந்து சேர வேண்டும்!'' என்று வேண்டிக் கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br />
சிறிது நேரத்தில் காட்டிற்குள்ளிருந்து தியாகுவின் மனைவி சர்மிளா நடந்து வந்தாள். மீண்டும் தன் மனைவியைக் கண்ட தியாகு வின் மனதில் நிம்மதி தோன்றியது. ஆனால், வனதேவதை தந்த மூன்று வரங்களும் வீணாகிவிட்ட வருத்தமும், அவனுக்குள் எழவே செய்தது.</div>
<div style="text-align: justify;">
<br />
தியாகுவிடம் வந்து சேர்ந்த சர்மிளா, ""என்னை மன்னித்து விடுங்கள்! நீங்கள் சொன்னதுபோல வன தேவதை அளித்த மூன்று வரங்களையும் நம் வாழ்க்கைக்குத் தேவையான வற்றைப் பெறுவதற்குப் பயன்படுத்தியிருக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br />
""அதற்கு மாறாக, நான் உங்கள் யோசனையைக் கேட்காமல் அழகியாக வேண்டும் என்ற பிடிவாதத் தில் மூன்று வரங்களையும் வீணாக்கி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்! இனி கண்ணாடி முன்னே அமர்ந்து எப்போதும் அலங்காரம் செய்து கொண்டிருக்க மாட்டேன். என் உருவத்தைப் பற்றி கவலைப்பட மாட்டேன். உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வேன்!'' என்று உறுதி கூறினாள்.</div>
<div style="text-align: justify;">
<br />
தியாகுவும், தன் மனைவி திருந்தியதை அறிந்து மகிழ்ச்சியுற்றான். அவன் தன் மனைவியோடு தன் குடிசைக்குத் திரும்பிச் சென்றான்.<br />
<br />
<div style="text-align: right;">
நன்றி தினமலர் சிறுவர்மலர் </div>
</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-23853984.post-64927197552043653132017-05-09T12:25:00.000+05:302017-05-09T12:25:26.883+05:30நொண்டிக் குதிரை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbVSSJzV6XBbvQwzFksaunZeRunFgfoqh0xo53KrFFhfycYSRKnEUC4NGgDICJm-Dqiei7-vpd4Yp5dQvGrKtaK4wWznXaSdNXyshEvXiKAyRMCvJQz6tsAFLWdy7gXyZeUCeV/s1600/Cripple+horse+tamil+kids+story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbVSSJzV6XBbvQwzFksaunZeRunFgfoqh0xo53KrFFhfycYSRKnEUC4NGgDICJm-Dqiei7-vpd4Yp5dQvGrKtaK4wWznXaSdNXyshEvXiKAyRMCvJQz6tsAFLWdy7gXyZeUCeV/s1600/Cripple+horse+tamil+kids+story.jpeg" /></a></div>
<div style="text-align: justify;">
காட்டில் அடர்ந்த புல்வெளியில் ஏராளமான குதிரைகள் வசித்து வந்தன. அந்தக் குதிரைகளின் கூட்டத்தில் நொண்டிக் குதிரை ஒன்றும் இருந்தது. மற்றக் குதிரைகள் எல்லாம் அந்த நொண்டிக் குதிரையை மட்டமாகவே நினைத்தன.</div>
<div style="text-align: justify;">
<br />எல்லாக் குதிரைகளும் அந்தப் புல்வெளியில் ஓடியாடி விளையாடுகின்ற நேரத்தில் அந்த நொண்டிக் குதிரையானது அமைதியுடன் ஒரிடத்தில் படுத்திருக்கும். அதனால், மற்ற குதிரைகள் எல்லாம் அதனை சோம்பேறி என்று கேலி செய்தன.</div>
<div style="text-align: justify;">
<br />நண்பர்கள் எல்லாம் தன்னைக் கேலி செய்கிறார்களே என்று நொண்டிக் குதிரைக்கு சற்று வருத்தமாகயிருந்தது. நண்பர்கள் எல்லாம் அறியாமையின் காரணமாக இப்படிக் கேலி செய்கின்றனர். அதனால் நாம் அவர்களின் மீது கோபப்படுவது நல்லதல்ல... என்று முடிவு செய்தது அந்த நொண்டிக் குதிரை.</div>
<div style="text-align: justify;">
<br />ஒருநாள்</div>
<div style="text-align: justify;">
<br />சிங்கம் ஒன்று அந்தப் புல்தரையில் பக்கமாக வந்தது. அந்த இடத்தில் ஏராளமான குதிரைகள் புற்களை மேய்ந்தபடி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது.</div>
<div style="text-align: justify;">
<br />""ஆஹா, இந்த இடத்தில் ஏராளமான குதிரைகள் நிற்கின்றதே... இந்தக் குதிரைகள் எல்லாம் நன்கு கொழுத்து காணப்படுகின்றன. நாம் வந்திருப்பது தெரிந்துவிட்டால், இந்தக் குதிரைகள் எல்லாம் ஒரே ஓட்டமாக எங்காவது ஓடி விடும். அதனால், இந்தக் குதிரைகளுக்குத் தெரியாமல் மறைந்திருந்து நாம் இவைகளைத் தாக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்தது சிங்கம்.</div>
<div style="text-align: justify;">
<br />புல்தரையின் ஓர் ஓரத்தில் படுத்திருந்த நொண்டிக் குதிரை, சிங்கத்தை கவனித்து விட்டது. இந்தச் சிங்கம் நம்மையும், நம் நண்பர்களையும் கவனித்து விட்டது. நிச்சயமாக இதனால் நமக்கு ஆபத்து நேரிடும். சிங்கம் அந்த இடத்தை விட்டுச் சென்ற பின்னர், உடனடியாக "இதனைப்பற்றி நம் நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்' என்று நினைத்தது அந்தக் குதிரை.</div>
<div style="text-align: justify;">
<br />சிறிது நேரத்தில் சிங்கம் அந்த இடத்தை விட்டுச் சென்றது. உடனே அந்த நொண்டிக் குதிரை மற்ற குதிரைகளை நோக்கியது.</div>
<div style="text-align: justify;">
<br />""நண்பர்களே, சற்று நேரத்திற்கு முன்னர் சிங்கராஜா மறைந்திருந்து நம்மையெல்லாம் கவனித்துச் சென்றுவிட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அவரால் நமக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள, உடனடியாக இந்த புல் வெளியினை விட்டு வேறு இடத்திற்குச் சென்று விட வேண்டும்,'' என்றது.</div>
<div style="text-align: justify;">
<br />நொண்டிக் குதிரையின் பேச்சைக்கேட்ட மற்ற குதிரைகள் எல்லாம் சிரித்தன.</div>
<div style="text-align: justify;">
<br />""நண்பர்களே, இந்த நொண்டிக் குதிரையின் பேச்சைக் கவனித்தீர்களா? இவன் நம்மையெல்லாம் பயம் காட்டுகின்றான். சிங்கராஜா நம்மைப் பார்த்து விட்டாராம். அதனால் நாம் இந்த இடத்தை விட்டு வேறு எங்காவது செல்ல வேண்டுமாம். கேட்பதற்கே மிகவும் வேடிக்கையாக இருக்கிறது,'' என்று ஒன்றுக்குள் ஒன்று கூறியபடி சிரித்துக் கொண்டன.</div>
<div style="text-align: justify;">
<br />"நண்பர்கள் எல்லாம் நம்மை ஏளனம் செய்கின்றார்களே, இவர்களுக்கு நான் நல்லதை சொல்ல நினைத்தேன். ஆனால், இவர்களோ என்னை ஏளனப்படுத்துகின்றனர். இவர்கள் எல்லாம் சிங்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்டால், என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. என்ன இருந்தாலும் இவர்கள் எல்லாம் எனது நண்பர்கள்தானே, இவர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக்கொள்வது என்னுடைய கடமையல்லவா? சிங்க ராஜாவின் பிடியில் இருந்து எப்படியாவது நண்பர்களை காப்பாற்ற வேண்டும். வரப்போகிற ஆபத்தை உடனே தடுத்தாக வேண்டும், அதற்கு நாம் என்ன செய்யலாம்' என்று யோசனை செய்தது.</div>
<div style="text-align: justify;">
<br />திடீரென அதன் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. அதன்படி அந்தக் குதிரையானது சிங்கத்தைத் தேடிச் சென்றது. தன் எதிரே தைரியத்துடன் ஒரு குதிரை நொண்டியபடி வருவதை, வியப்போடு பார்த்தது சிங்கம்.</div>
<div style="text-align: justify;">
<br />""சிங்க ராஜாவே, வணக்கம். என் வருகை உங்களுக்கு வியப்பினை ஏற்படுத்தலாம். இருந்தாலும் உங்களுக்கு சந்தோஷமான செய்தி சொல்லவே வந்துள்ளேன். என்னை நம்புங்கள்,'' என்று பணிவோடு கூறியது குதிரை.</div>
<div style="text-align: justify;">
<br />சிங்கமோ கர்....கர்... என்று உறுமியது. அதன் முகம் கோபத்தால் சிவந்திருந்தது. இருந்தாலும் நொண்டியபடி நடந்து வந்த குதிரையைப் பார்த்து சற்று பரிதாபப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br />சிங்கம் ஓரளவுக்கு தன்னைப் பார்த்து பரிதாபப்படுகிறது என்பதை குதிரை உணர்ந்து, தன் எண்ணத்தைத் தெரிவிக்க இதுதான் சரியான சமயம் என்று முடிவு செய்தது.</div>
<div style="text-align: justify;">
<br />""சிங்க ராஜாவே, நீங்கள் கருணை மிக்கவர் என்று எனக்குத் தெரிகிறது. உங்கள் முகத்தில் கருணை பொங்குகிறது. கருணையே வடிவான உங்கள் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்று எனக்குத் தோன்றுகிறது,'' என்றது.</div>
<div style="text-align: justify;">
<br />""குதிரையே, நீ கூறியது போல் கோபமாக இருக்கும் நேரம் போக அவ்வப்போது எனக்குக் கருணை ஏற்படுவது உண்மைதான். என் கருணை பார்வையை குறிப்பால் உணர்ந்து கொண்ட நீ அறிவு மிக்கவனாகத்தான் தெரிகிறாய். முதலில் நீ எதற்காக என்னை சந்திக்க வந்தாய்? ஏதோ சந்தோஷமான செய்தி என்றாயே, அது என்னவென்று உடனடியாக எனக்குத் தெரியப்படுத்து,'' என்றது சிங்கம்.</div>
<div style="text-align: justify;">
<br />""சிங்க ராஜாவே, ஒருநாள் நானும் என் நண்பர்களும் புல்தரையில் நின்ற போது மறைந்திருந்து நீங்கள் எங்களை கவனித்து விட்டீர்கள். தாங்கள் எங்களை உடனடியாகத் தாக்க வராமல் அமைதியுடன் அந்த இடத்தை விட்டுச் சென்றீர்கள். தாங்கள் அமைதியுடன் செல்வதை நான் கவனித்தேன். தங்கள் மூலம் என் நண்பர்களுக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்தேன். அதனால் தான் அதனைத் தடுக்க வேண்டி ஓடோடி வந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br />""சிங்க ராஜாவே, நான் என் நண்பர்களை, என் உயிரை விட மேலாக மதித்து வருகிறேன். தங்களால் என் நண்பர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் அதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, நானே என் உயிரைக் கொடுத்து உங்களுக்கு விருந்தாக வந்துள்ளேன். நீங்கள் என்னைச் சாப்பிடுங்கள். என் நண்பர்களை விட்டு விடுங்கள்,'' என்று கெஞ்சிக் கேட்டது நொண்டிக் குதிரை.</div>
<div style="text-align: justify;">
<br />தன் நண்பர்களுக்காக இந்த அளவுக்கு கெஞ்சும் நொண்டிக் குதிரையைக் கண்டு சிங்கத்தின் மனம் மேலும் இளகியது. அதன் கண்களில் இருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது.</div>
<div style="text-align: justify;">
<br />""சிங்கமே, நீ எதற்காக அழுகிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது? நான் ஏதாவது உன் மனத்தை புண்படுத்தும் விதத்தில் பேசிவிட்டேனா?'' என்று கேட்டது குதிரை.</div>
<div style="text-align: justify;">
<br />""குதிரையே, நீ என் மனம் புண்படும்படியாகப் பேசவில்லை. ஆனால், உன் நண்பர்கள் அனைவருமே உன் மனம் புண்படும்படியாகப் பேசுவதை நான் மறைந்திருந்து கவனித்தேன். ஆனால், நீயோ அதனை எல்லாம் மனத்தில் வைத்துக் கொள்ளாமல் உன் நண்பர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறாயே, உன்னைப் பற்றி உன் நண்பர்கள் இதுவரையிலும் புரிந்து கொள்ளாதது துரதிர்ஷ்டம்தான். இதோ இப்போதே உன்னை அழைத்துச் சென்று, உனது உயர்ந்த குணத்தைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கிறேன்,'' என்றவாறு குதிரையை அழைத்துக் கொண்டு புறப்பட்டது சிங்கம்.</div>
<div style="text-align: justify;">
<br />அந்த நேரத்தில் புல் தரையில் எல்லா குதிரைகளும் கூட்டமாக நின்று புற்களை மேய்த்து கொண்டிருந்தன. நொண்டிக் குதிரை சிங்கத்தோடு வருவதைக் கண்டதும் எல்லாக் குதிரைகளும் திடுக்கிட்டன.</div>
<div style="text-align: justify;">
<br />உடனே சிங்கம், ""நீங்கள் யாரும் என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு உண்மையை எடுத்துரைத்து, உங்கள் அறியாமையைப் போக்கும் பொருட்டே உங்களைத் தேடி வந்துள்ளேன்,'' என்றது சிங்கம்.</div>
<div style="text-align: justify;">
<br />சிங்கத்தின் பேச்சைக்கேட்ட மாத்திரத்தில் எல்லா குதிரைகளும் திகைப்படைந்தன.</div>
<div style="text-align: justify;">
<br />""சிங்க ராஜாவே, வணக்கம். தங்களின் அன்பான பேச்சைக் கேட்டதும் எங்கள் அச்சம் விலகிவிட்டது. தாங்கள் எங்களுக்கு என்ன நீதி வழங்கினாலும் அதனை ஏற்றுக்கொண்டு உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு இருப்போம்,'' என்றன குதிரைகள்.</div>
<div style="text-align: justify;">
<br />""நல்லது குதிரைகளே! இதோ நிற்கின்ற உங்கள் நண்பனான இந்த நொண்டிக் குதிரையை நீங்கள் உங்களில் ஒருவனாக எண்ணாமல் அதன் மனத்தை புண்படுத்தி வந்தீர்கள். ஆனால், உங்கள் நண்பனான இவனோ, என்னால் உங்களுக்கு வரப் போகின்ற ஆபத்தைத் தடுத்து, உங்களுக்காக எனக்கு விருந்தாக உணவளிக்க வந்தது. அதன் தியாகத்தை நான் என்னவென்று சொல்வது. இப்படி ஒரு தியாகமிக்க நண்பனை இத்தனை காலமும் நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருந்து வீட்டீர்கள்,'' என்றது சிங்கம்.</div>
<div style="text-align: justify;">
<br />சிங்கத்தின் பேச்சைக் கேட்டதும் எல்லா குதிரைகளும் தலை குனிந்தன. அன்போடு அந்த நொண்டிக் குதிரையினை சூழ்ந்து கொண்டன. அதனைக் கண்டு சிங்கமும் மகிழ்ச்சியடைந்தது.</div>
<div style="text-align: justify;">
<br />மற்ற குதிரைகளோ நொண்டிக் குதிரையைப் பார்த்தன.</div>
<div style="text-align: justify;">
<br />""நண்பா, உனக்கு கால்தான் ஊனம். ஆனால், எங்களுக்கோ மனமே ஊனமாகி விட்டது. அதனால்தான் உன் நட்பின் அருங்குணத்தை தெரியாமல் இருந்து விட்டோம். நீ அமைதியாக இருந்தே சிங்க ராஜாவே போற்றும்படியான அன்பான செயலைச் செய்துவிட்டாய். நாங்கள் எல்லாரும் உன்னை வாழ்த்தி வணங்க கடமைப்பட்டுள்ளோம்,'' என்றன குதிரைகள்.</div>
<div style="text-align: justify;">
<br />"நாம் வந்த வேலை இனிதே முடிவடைந்து விட்டது. குதிரைகள் எல்லாம் திருந்திவிட்டன. இனிமேல் அவற்றுக்குள் எந்தவிதமான பேதமும் ஏற்படாது' என்று நினைத்து திரும்பி சென்றது சிங்கம்.</div>
<div style="text-align: justify;">
<br />*** </div>
<div style="text-align: right;">
நன்றி தினமலர் சிறுவர்மலர்</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23853984.post-86031131683168186082017-05-08T13:34:00.000+05:302017-05-09T12:26:03.364+05:30ஆண் அழகன்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBg0iLOeoyFp6iRbAHXVEUmMDkZfo3kZhhtzTRqzmAI1ONKBB621ywc67zmF3Kj_SBGz3qXai7Lx1cJUMApYTuV2DXk9AdpwyuWJ3HE8k3bImqUURjolf7oT6Y7cThUK5PVHXr/s1600/man+award+kids+story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBg0iLOeoyFp6iRbAHXVEUmMDkZfo3kZhhtzTRqzmAI1ONKBB621ywc67zmF3Kj_SBGz3qXai7Lx1cJUMApYTuV2DXk9AdpwyuWJ3HE8k3bImqUURjolf7oT6Y7cThUK5PVHXr/s1600/man+award+kids+story.jpeg" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவகோட்டை என்னும் ஊரில், பரத் என்பவன் வசித்து வந்தான். அழகன்; ஆனால், சரியான முட்டாள். எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br />
அவன் முழு முட்டாள் என்று தெரியாமல், அவனது அழகில் மயங்கி, கட்டிக் கொண்டாள் மாலதி. அவனின் முட்டாள்தனத்தால் ஏராளமான தொல்லைகளையும் அனுபவித்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br />
'எப்படியாவது அவனை திருத்த வேண்டும்' என்று மனதிற்குள் எண்ணினாள் மாலதி.</div>
<div style="text-align: justify;">
<br />
அந்த ஊருக்கு, புகழ்பெற்ற கூத்துக் குழு ஒன்று வருவதாகவும், அவர்கள், ராமாயண நாடகம் நடத்துவதாகவும் அறிவித்திருந்தனர். அந்த நாடகத்தை பார்த்தாவது கணவன் திருத்துவான் என நினைத்தாள். அதனால், அவனை நாடகம் பார்க்க அனுப்பி வைத்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br />
அவனுக்கு நாடகம் பார்க்க மனமில்லை. அதனால், ஒரு மூலையில் சென்று, நன்றாக தூங்கினான்.</div>
<div style="text-align: justify;">
<br />
கூடியிருந்த கூட்டத்திற்கு, பணக்காரர் ஒருவர் இனிப்புகளை கொடுத்தார். நன்றாக தூங்கி கொண்டிருந்த பரத்தின் வாயில், இனிப்பை போட்டார். அதை சுவைத்து சாப்பிட்டான் பரத்.</div>
<div style="text-align: justify;">
<br />
மறுநாள் காலையில், வீட்டிற்கு திரும்பினான் பரத்.</div>
<div style="text-align: justify;">
<br />
''என்னங்க, நாடகம் எப்படி இருந்தது?'' என்று கேட்டாள் மாலதி.</div>
<div style="text-align: justify;">
<br />
''நாடகம் ரொம்ப இனிப்பா இருந்தது...'' என்றான் பரத்.</div>
<div style="text-align: justify;">
<br />
'நாடகம் ரொம்ப பிடித்து விட்டது போலிருக்கிறது. அதனால் தான் இனிப்பாக இருக்கிறது என்று சொல்கிறான் போலும்' என நினைத்தாள் மாலதி.</div>
<div style="text-align: justify;">
<br />
அன்று இரவும், அவனை நாடகம் பார்க்க அனுப்பிவிட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br />
அன்றும் ஓரிடம் தேடிப்போய் படுத்து தூங்கினான். ஒரு சிறுவன், அவன் மேல் ஏறி அமர்ந்து நாடகம் பார்த்துக்கொண்டிருந்தான். தூக்கத்தில் இருந்த பரத், அதை அறியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br />
நாடகம் முடிந்ததும் எல்லாரும் புறப்பட்டனர். பரத்திற்கு உடலெல்லாம் வலித்தது. வீட்டிற்கு சென்றான்.</div>
<div style="text-align: justify;">
<br />
''நாடகம் எப்படி இருந்தது?'' என்று கேட்டாள் மாலதி.</div>
<div style="text-align: justify;">
<br />
''மிகவும் கனமாக இருந்தது...'' என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br />
'ராமன் - சீதைக்கு ஏற்பட்ட துன்பத்தையே கனம் என்று சொல்கிறான் போலும்' என நினைத்தாள் மாலதி.</div>
<div style="text-align: justify;">
<br />
அன்று இரவும், நாடகம் பார்க்க அனுப்பி வைத்தாள். அன்றும் ஒரு ஓரமாய் படுத்து தூங்கினான் பரத்.</div>
<div style="text-align: justify;">
<br />
ஒரு நாய் அவன் முகத்திற்கு நேராக சிறுநீர் கழித்தது; திடுக்கிட்டு விழித்தான். கூத்து முடிந்து எல்லாரும் சென்றுவிட்டனர். தன் முகத்தை துடைத்தபடியே வீடு வந்து சேர்ந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br />
மனைவி ஓடி வந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br />
''என்னங்க... இன்னிக்கு நாடகம் எப்படி இருந்தது?'' என்று கேட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br />
''ஒரே உவர்ப்பாக இருந்தது...'' என்று சொல்லி, 'தூ... தூ...' வென்று துப்பினான்.</div>
<div style="text-align: justify;">
<br />
அப்போது தான், மாலதிக்கு உறைத்தது. 'இவன் நாடகம் பார்க்கவில்லை; வேறு எதுவோ நடந்திருக்கிறது' என்று நினைத்து அவனை விசாரித்தாள். அவனும் உண்மையை கூறினான்.</div>
<div style="text-align: justify;">
<br />
'இந்த முட்டாளை எத்தனை ஜென்மம் ஆனாலும் திருத்த முடியாது' என்பதை உணர்ந்து, நொந்து போனாள் மாலதி.</div>
<div style="text-align: justify;">
<br />
அழகு அழகுன்னு, அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அறிவுக்கு முக்கியத்துவம் கொடுங்க குட்டீஸ்...<br />
<br />
<div style="text-align: right;">
நன்றி தினமலர் சிறுவர்மலர் </div>
</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23853984.post-86089243858815388152017-05-07T23:51:00.001+05:302017-05-07T23:53:23.942+05:30கூடு விட்டு கூடு பாய்ந்து!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqBM6nnUoMW6nAzlntLuQhE69xKCl_ZHmc5jLeXSzEpsUwcNFT5ShxSlKarUoOmv5ulcHkqNbQ2ERERuXz6K76jUcYP6phfI99GBVQpTXL6TQIcRHS23ITKuzXd597owpmRmCc/s1600/kids+tamil+story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqBM6nnUoMW6nAzlntLuQhE69xKCl_ZHmc5jLeXSzEpsUwcNFT5ShxSlKarUoOmv5ulcHkqNbQ2ERERuXz6K76jUcYP6phfI99GBVQpTXL6TQIcRHS23ITKuzXd597owpmRmCc/s1600/kids+tamil+story.jpeg" /></a></div>
<div style="text-align: justify;">
அந்தக் காலத்தில் காவிரி நதிக்கரையில் ஒரு முனிவர், ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். அவரிடம், பல மாணவர்கள் பல நாடுகளில் இருந்தும் வந்து கல்வி கற்றனர். முனிவருக்கும் ஒரு மந்திரவாதிக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டது. இதனால், மந்திரவாதி முனிவரைத் தன் மாந்திரீக சக்தியால் கொன்று விடுவதாக, மிரட்டினான். முனிவர் அதைச் சட்டை செய்யவில்லை.</div>
<div style="text-align: justify;">
ஒருநாள் மந்திரவாதி, குட்டிச் சாத்தான்களை ஏவி, முனிவரின் ஆசிரமத்தில் கல்லெறிய வைத்தான். தியானத்தில் இருந்த முனிவர், ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""கல்லெறியும் கயவர்களே... நீங்கள் யார்?''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""எங்களைப் பார்த்து யாரென்றா கேட்கிறாய்? ஊசிமூக்கு மூடா... உன்னை கொல்ல வந்த எதிரிகள்!''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""நீங்கள் யாரென்று எனக்குத் தெரியும். உங்களை ஏவி விட்டவனையும் நன்கறிவேன். மரியாதையாகச் சென்று விடுங்கள்!''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""உம்மைத் தூக்கிக் கொண்டு வரவேண்டுமென்பது எங்கள் தலைவன் கட்டளை!''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""அழிந்து போவீர்கள்!''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""எங்களை அழிக்க உம்மாலும் முடியாது. உன் பாட்டனாலும் முடியாது. நாங்கள் சாகாவரம் பெற்றவர்கள்,'' என்றன குட்டிச் சாத்தான்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""குட்டிச் சாத்தான்களே... எட்டியே நில்லுங்கள் என்னிடம் வராதீர்கள்!''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""என்ன செய்து விடுவீர்?'' என்று அவை அவரை நெருங்கின.</div>
<div style="text-align: justify;">
அந்தோ பரிதாபம்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த ஆறு குட்டிச் சாத்தான்களையும் வவ்வால்களாக மாற்றி, மரத்தில் தொங்க விட்டு விட்டார் முனிவர். இதை எட்ட நின்று பார்த்துக் கொண்டிருந்த ஏழாவது குட்டிச் சாத்தான், குடுகுடுவென்று ஓடி மந்திரவாதியிடம் சொன்னது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மூன்றாம் நாள், முனிவர் ஆசிரமத்தில் இல்லாத போது, மந்திரவாதி சென்று மரங்களில் தொங்கிக் கொண்டிருந்த வவ்வால்களை மீண்டும் குட்டிச் சாத்தான்களாக மாற்றிக் கொண்டு வந்து விட்டார். அதிலிருந்து மந்திரவாதிக்கும், முனிவருக்கும் பகை தொடர்ந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மந்திரவாதி முனிவரைப் பழிவாங்க நினைத்தான். முனிவர் கூடுவிட்டுக் கூடு பாயும் கலையைக் கற்றவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மந்திராவதிக்கும், அந்தக் கலை தெரியும் என்று முனிவருக்குத் தெரியாது.</div>
<div style="text-align: justify;">
வழக்கமாக, முனிவர் காவிரியாற்றில் காலையில் நீராடுவார். பவுர்ணமி நாள்களில், இரவு நேரங்களில் காவிரியின் ஒரு துறையில் பச்சை நிறத் தவளையாக மாறி நீரில் நீந்தி மகிழ்வார். இந்த விஷயத்தைக் குட்டிச் சாத்தான் ஒன்று உளவறிந்து மந்திரவாதியிடம் சொல்லிவிட்டது.</div>
<div style="text-align: justify;">
பவுர்ணமி அன்று பச்சைத் தவளையாக மாறி நீரில் குதித்த முனிவரை, மந்திரவாதி பாம்பாக மாறித் துரத்தினான். முனிவருக்கு இது தெரிந்தது. வேகமாகத் நீந்த ஆரம்பித்தார். பாம்பு விடவில்லை. பாம்பு பின்னாலேயே துரத்திச் சென்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""ஏய் சாமியாரே.... நில் உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்!''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""வேண்டாம்... என்னை விட்டு விடு!''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""முடியாது. முடியவே முடியாது. குட்டிச் சாத்தான்களை ஏன் வவ்வால்களாக்கிக் கட்டி வைத்தாய்?''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""என்னைக் கொல்ல வந்தன. அதனால்தான் அப்படி செய்தேன்,'' என்றார் முனிவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""இப்போது ஒழிந்து போ!''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாம்பு துரத்தியது. தவளை திக்குமுக் காடியது. சர்ரென்று நீந்தி வந்த பாம்பின் வேகத்திற்குத் தவளையால் ஈடுகொடுக்க முடிய வில்லை.</div>
<div style="text-align: justify;">
இதோ பாம்பின் வாய்க்குள் போகப் போகிறது தவளை!</div>
<div style="text-align: justify;">
அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாய் பாம்பின் எதிரே வந்த முதலை ஒன்று, தன் வாலால் பாம்பை அடித்தது. அடியில் மிரண்டு போன பாம்பால், தவளையைப் பின் தொடர முடியவில்லை. தவளை கரையில் தாவியது. பின் முனிவராகிய தவளை ஒரு புறாவாக மாறி, வானத்தில் பறந்தது. இதைப் பார்த்த மந்திரவாதி தான் ஒரு வல்லூறாக மாறி புறாவைத் துரத்தினான்.</div>
<div style="text-align: justify;">
புறா பறந்தது. பறந்தது பறந்து கொண்டே இருந்தது. வல்லூறு துரத்திக் கொண்டே வந்தது. எதிரே இரை தேடிக் கொண்டிருந்த புறாக் கூட்டத்துடன் முனிவராகிய புறா கலந்து விட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""டேய் முனிவரே... தனியே வா. எப்படியும் உன்னைக் கண்டுபிடித்துக் கொல்வேன்!''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""உன்னால் என்னைக் கொல்ல முடியாது,'' என்று மறுபடியும் புறா பறந்தது. வல்லூறால் அதைப் பின்தொடர முடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தப்பித்தோம். பிழைத்தோம் என்று பறந்து வந்த புறா இளைப்பாறுவதற்காக, ஒரு மரத்தின் மேல் அமர்ந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வேட்டைக்காரன் ஒருவன் அன்று முழுவதும் வேட்டையாடி பல புறாக்களையும், வேறு சில பறவைகளையும் வேட்டையாடி, தன் கூண்டில் வைத்திருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மரத்தின் மேல் இருந்த மணிப் புறாவைக் குறிபார்த்து எய்ய அம்பை எடுத்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""வேடனே... என்னைக் கொன்று விடாதே... நான் உண்மையில் புறா அல்ல முனிவர்!''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புறா பேசுவதைக் கேட்ட வேடன், மிகவும் ஆச்சரியப்பட்டான். தன் வில்லைக் கீழே போட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""முனிவரே! ஏன் புறாவாக மாறினீர்?''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""அது ஒரு பெரிய கதை. என்னை இப்போது மந்திரவாதி ஒருவன் வல்லூறாக மாறித் துரத்தி வருகிறான். எனக்கு அடைக்கலம் கொடு,'' என்றவாறே புறா அவன் காலடியில் விழுந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""இங்கே அந்த மந்திரவாதி வல்லூறு வரட்டும். நான் கவனித்துக் கொள்கிறேன். முனிவரே நான் பிடித்து வைத்திருக்கும் புறாக் களோடு கூண்டுக்குள் புகுந்து விடுங்கள்!''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முனிவர் புறாக்களோடு புறாக்களாகக் கலந்து விட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதே சமயம் மந்திரவாதி வல்லூறு அந்த இடத்திற்கு வந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""வேடனே...அந்தப் புறா எனக்குரியது''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""யார் நீ?''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""அதை உனக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""அப்படியென்றால் புறா உனக்குக் கிடைக்காது!''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""அவன் என் எதிரி''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""விளக்கமாகச் சொல்!''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""சொல்ல முடியாது!''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""புறாவைக் கொடுக்க முடியாது... உனக்கு தெரிந்ததைப் பார்த்துக் கொள்!''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""நான் மீண்டும் மனிதனாகி, உன்னைக் கொன்று விடுவேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""நான் இப்போது உன்னைக் கொல்லப் போகிறேன்,'' அம்பை எடுத்தான் வேடன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மந்திரவாதியான, வல்லூறு பறந்து விட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""முனிவரே... நீங்கள் இனி புறா உருத்தில் வெளியே செல்ல வேண்டாம். அது ஆபத்தில் முடியும். வேறு உருவத்தில் செல்லுங்கள்!''</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முனிவருக்குத் திடீரென்று புலியின் உருவம் ஞாபகத்திற்கு வந்தது. புலி உருவம் எடுத்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரவு முழுவதும் வேடனின் வீட்டுக் கூரையில் பதுங்கி இருந்த வல்லூறான மந்திரவாதி, ஒரு முரட்டுக் காளையின் உருவம் எடுத்தான். முனிவர் புலியின் உருவம் எடுத்தது அவனுக்குத் தெரியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீட்டிலிருந்து வெளியே வந்த புலியைக் கண்டதும், மந்திரவாதியான காளை தப்பித்து ஓட முயன்றது. காளையைப் புலி விரட்டியது. காளை வேகமாக ஓடியது. காற்று வேகத்தில் சென்ற புலி, காளை மீது தாவிப் பாய்ந்தது. தன் கூரிய நகங்களால் அதைக் கிழித்துக் கொன்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்கிடையில், முனிவரின் உடலைத் தீயிட்டுக் கொளுத்த அந்தக் குட்டிச் சாத்தான்கள் முயற்சி செய்து கொண்டிருந்தன. முனிவர் புலியில் இருந்து குட்டிச்சாத்தான்களிடையே புகுந்து உயிர் பெற்றார்.முனிவர் உயிருடன் எழுவதைக் கண்ட குட்டிச் சாத்தான்கள் பயந்து ஓடின.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முனிவர் விடவில்லை. அந்த ஏழு குட்டிச் சாத்தான்களையும் மறுபடியும். வவ்வால்களாக்கி மரத்தில் தொங்க விட்டார்.</div>
***<br />
<br />
<div style="text-align: right;">
நன்றி தினமலர் சிறுவர்மலர் </div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23853984.post-60458722874808811192017-05-05T18:51:00.000+05:302017-05-07T23:49:03.304+05:30அதி புத்திசாலிகள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrO5oF805GPfgzEnYqQL0V7BC6oulyY2UmhvTvbYP-mPK_jN3k1YDaRy4lMfdWYklVV1OW-X96p1h_zvWwSjNvsgr3Ae6lhUFf0klGVgnDYUQuHzuNT_mWdxqI9HghZFjfdAjN/s1600/the+clever.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrO5oF805GPfgzEnYqQL0V7BC6oulyY2UmhvTvbYP-mPK_jN3k1YDaRy4lMfdWYklVV1OW-X96p1h_zvWwSjNvsgr3Ae6lhUFf0klGVgnDYUQuHzuNT_mWdxqI9HghZFjfdAjN/s1600/the+clever.jpeg" /></a></div>
<div style="text-align: justify;">
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே தாங்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருநாள்-</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்கள் மரத்தால் ஒரு பெரிய வீடு கட்டத் தீர்மானித்தனர். அதற்கான நல்ல மரத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் காட்டுக்குப் போக முடிவு செய்தனர். அப்போது, அவர்களில் மிகவும் அதிபுத்திசாலி யான ஒருவன் சொன்னான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
''நான் குதிரை வண்டியில் ஏறி முதலில் போகிறேன். நீங்க ளெல்லாம் பின்னால் வாருங்கள்!'' என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லாரும் அதை ஏற்றுக் கொண்டனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதிபுத்திசாலி குதிரை வண்டியில் ஏறி காட்டுக்குப் பாய்ந்து சென்றான். ஆனால், வழியில் அவன் குதிரைவண்டி ஒரு கல்லின் மீது ஏறியதால் கவிழ்ந்தது. அவன் கையிலிருந்த கோடாரி தூரத்தில் சென்று விழுந்தது. அவனும் ஆழமான ஒரு குழியில் விழுந்து விட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குதிரை வண்டிக்குப் பின்னால் வந்த மற்ற அறிவாளிகள், அதிபுத்திசாலியின் கோடாரி வழியில் கிடப்பதைப் பார்த்தனர். அவர்களில் மிகச் சிறந்த அறிவாளி அவன்தான் என்பதால், அவன் கோடாரியை விட்டுச் சென்றதற்கு ஏதும் முக்கியமான காரணம் இருக்கும் என்று மற்றவர்கள் நினைத்தனர். அதனால், எல்லாரும் மரம் வெட்டுவற்காகத் தங்கள் கையில் எடுத்து வந்திருந்த கோடாரியை அப்படியே போட்டுவிட்டுத் தொடர்ந்து சென்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காட்டுக்குச் சென்று வெட்டுவதற்கு ஏற்ற மரத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், யார் கையிலும் கோடாரி இல்லையே, பிறகு எப்படி மரம் வெட்டுவது? எல்லாரும் ஒன்றாக அமர்ந்து இதற்கு என்ன வழியென்று சிந்தித்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அங்கிருந்தவர்களில் முக்கியமான அறிவாளி சொன்னான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
''நான் ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறேன். மரத்தை வெட்ட முடியவில்லை என்றாலும் நாம் மரத்தின் கிளையை ஒடிப்போம். இப்போது இருப்பதில் நான்தானே பெரிய அறிவாளி. அதனால் நான் முதலில் மரத்தில் ஏறி உறுதியான ஒரு கிளையைப் பிடித்துத் தொங்குகிறேன். அப்போது உங்களில் ஒருவர் என் காலைப் பிடித்துத் தொங்க வேண்டும். அவருடைய காலைப் பிடித்து மற்றொருவர் தொங்க வேண்டும். அப்படி நீண்ட சங்கிலி போல ஒருவர் காலை ஒருவர் பிடித்துத் தொங்கும் போது நம் பாரம் தாளாமல் கிளை ஒடிந்து கீழே விழும்!'' என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அது மிகவும் நல்ல கருத்துதான் என்று எல்லாரும் ஏற்றுக் கொண்டனர். அவ்வாறு அந்த அறிவாளி பக்கத்திலிருந்த மரத்தில் ஏறி ஒரு உறுதியான கிளையைப் பிடித்து தொங்கினான். அவன் காலை மற்றொருவன் பிடித்துத் தொங்கி னான். அவன் காலை இன்னொருவன் பிடித்துத் தொங்கினான். இப்படியே எல்லாரும் ஒருவர் காலை ஒருவர் பிடித்துத் தொங்கினர். மிகப் பெரிய பாரத்தால் கிளை, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விடக்கூடிய நிலைக்கு வந்தது. அப்போது அறிவாளி சொன்னான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
''நண்பர்களே, கிளை இப்போது ஒடிந்து விடும். அதற்கு முன்பு நான் இந்தக் கிளையை இன்னும் கொஞ்சம் பலமாகப் பற்றிக் கொள்கிறேன்!'' என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிளையை மேலும் வலுவாகப் பற்றிக் கொள்வதற்காக அவன் கையைச் சற்று அசைத்ததும் அவன் பிடி நழுவியது. எல்லாரும் கீழே விழுந்தனர். ஆனால், அந்த மரக்கிளையோ, முறியாமல் அப்படியே இருந்தது. இனி என்ன செய்வது என்று எல்லாரும் ஆலோசித்தனர். அந்தக் கூட்டத்தி லிருந்த வேறொரு அறிவாளி இப்படிச் சொன்னான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
''நண்பர்களே, நாம் இந்த மரத்தின் கீழே தீ மூட்டுவோம். அந்த வெப்பத்தில் கிளை ஒடிந்து கீழே விழுந்துவிடும்!'' என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லாரும் அது ஒரு சிறந்த கருத்துத்தான் என்று ஏற்றுக் கொண்டனர். அந்த அறிவாளி அவனிடம் இருந்த ஒரே ஒரு தீப்பெட்டியை வெளியே எடுத்தான். ஆனால், அவனுக்கு ஒரு சந்தேகம். தீக்குச்சி ஏரியவில்லை என்றால் என்ன செய்வது? அவன் ஒரு தீக் குச்சியை உரசி பற்றி வைத்துப் பார்த்தான். அது எரிந்தது. ஆயினும் அடுத்த குச்சி எரியவில்லையென்றால் என்ன செய்வது? அவனுக்கு மீண்டும் சந்தேகம் வந்தது. அடுத்த தீக்குச்சியையும் அவன் பற்ற வைத்துப் பார்த் தான். அப்படி தீப்பெட்டியில் இருந்த எல்லா தீக்குச்சியும் தீரும்வரை அவன் உரசி உரசிப் பார்த்தான். கடைசியில் அவன் திருப்தியுடன் சொன்னான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
''தீக்குச்சிகளெல்லாம் தீர்ந்துவிட்டன. ஆயினும் என்ன? எல்லா தீக்குச்சிகளும் நன்றாக எரியக்கூடியவைதான் என்று நமக்குத் தெளிவானது அல்லவா?'' என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முன்பு மரத்திலிருந்து விழுந்த அறிவாளி, மற்றொரு கருத்தைச் சொன்னான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
''நண்பர்களே, நான் முன்பு மரத்திலிருந்து கீழே விழுந்தபோது என் தலை கிளையில் மோதியது. அப்போது நான் நிறைய நட்சத்திரங்களையும், தீப்பொறிகளையும் பார்த்தேன். அது போன்ற தீப்பொறிகளை வைத்து நாம் இந்த மரத்தை எரிய வைக்க லாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் என் தலையில் மாறி மாறி அடிக்க வேண்டும். அப்போது நான் பார்க்கும் தீப்பொறிகளை நீங்கள் உடனே பிடித்துச் சேகரிக்க வேண்டும்!'' என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நண்பர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். பிறகு அந்த அறிவாளியை மாறி, மாறி அடித் தனர். அடி வாங்கும்போது அவன் நிறைய நட்சத்திரங்களையும், தீப்பொறிகளையும் பார்த்தான். ஆனால், அதையெல்லாம் பிடித்து நண்பர்களிடம் கொடுப்பதற்கு அவனால் முடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்கள் மீண்டும் கூடி அமர்ந்து சிந்தித் தனர். அவர்களில் ஒருவன் அப்போது நல்ல படியாகச் சிந்தித்தான். அவன் சொன்னான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
''நண்பர்களே, நாம் திரும்பிச் சென்று, வழியில் போட்டுவிட்டு வந்த கோடாரிகளை மீண்டும் எடுத்து வரலாம். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை!'' என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவ்வாறு அவர்கள் சென்று தங்கள் கோடாரிகளுடன் திரும்பி வந்தனர். தேவை யான மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு கிராமத்துக்குச் சென்றனர்.</div>
<div style="text-align: justify;">
தங்களது புத்திசாலித்தனத்தை நினைத்து தங்களை தாங்களே மிகவும் மெச்சிக் கொண்டனர்.<br />
<br />
<div style="text-align: right;">
நன்றி தினமலர் சிறுவர்மலர் </div>
</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23853984.post-42560861026088214872017-05-05T09:50:00.002+05:302017-05-05T09:51:37.985+05:30பொற்காசு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOnOYVM_xd0ytqX5Use8rTEmhPDefwMr0meLUG85h_q2XH2sA62Z28L72KBqP-wqZ_KHy5E59lYYRFnB53WcccvpZ-IewBO6HYDQOwL529-gpP2T4Fxnv6l31coasLY6ycdZqU/s1600/gold+coin+tamil+short+story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOnOYVM_xd0ytqX5Use8rTEmhPDefwMr0meLUG85h_q2XH2sA62Z28L72KBqP-wqZ_KHy5E59lYYRFnB53WcccvpZ-IewBO6HYDQOwL529-gpP2T4Fxnv6l31coasLY6ycdZqU/s320/gold+coin+tamil+short+story.jpeg" width="289" /></a></div>
<div style="text-align: justify;">
முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒன்றை அரசவைக்குக் கொண்டு வந்து அரசனிடம் தந்தான். அந்த மீனைக் கண்டு மகிழ்ந்த அரசன் மீனவனுக்கு உடனே நூறு பொற்காசுகள் பரிசளிக்குமாறு கட்டளை இட்டான். பக்கத்திலே அமர்ந்திருந்த அரசிக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை.</div>
<br />
<div style="text-align: justify;">
அரசனைப் பார்த்து, ""நாளைக்கே நம் வீரர்கள் யாரேனும் செயற்கரிய வீரச் செயல் செய்து வந்தால், நீங்கள் வழக்கம் போல நூறு பொற்காசுகள் பரிசளிப்பீர்கள். ஆனால், பரிசு பெறுபவன், ஒரு மீனவனுக்குக் கொடுத்ததைத்தானே, அரசர் நமக்கும் தந்துள்ளார் என்று நினைப்பான். அதனால், அந்த மீனவனுக்குக் கொடுத்த பரிசை ஏதேனும் சொல்லித் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்!'' என்றாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
""நீ சொல்வது சரிதான். ஆனால், கொடுத்த பரிசை மற்றவர் குறை சொல்லாதபடி எப்படித் திரும்ப வாங்குவது?'' என்று கேட்டான் அரசன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""அந்த மீன் ஆணா? பெண்ணா? என்று கேளுங்கள். அவன் ஆண் என்று சொன்னால் பெண் மீன் வேண்டும் என்று மீனைத் திருப்பித் தந்து விடுங்கள். பெண் என்று சொன்னால் ஆண் மீன் வேண்டும் என்று சொல்லுங்கள்!'' என்றாள் அவள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அரசனுக்கு தன் மனைவியின் அறிவுரை மிக நல்லதாகப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
மீனவனைப் பார்த்து, ""நீ கொண்டு வந்த மீன் ஆண் மீனா, பெண் மீனா?'' என்று கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதற்கு அந்த மீனவன் பணிவாக, ""அரசே! இது ஆணுமல்ல, பெண்ணும் அல்ல, பொதுவான மீன்!'' என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீனவனிடமிருந்து தான் சற்றும் எதிர்பாராத பதில் வந்ததைக் கண்டு அரசன் பெரிதும் மகிழ்ந்தான். அந்த மகிழ்ச்சியில் அவனுக்கு மேலும் நூறு பொற்காசுகள் தரும்படி கட்டளை இட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""ஐயோ! நூறு பொற்காசுகள் கொடுத்ததே அதிகம். அதைத் திரும்ப வாங்குங்கள் என்றால், மேலும் நூறு பொற்காசுகள் தந்துவிட்டீர்களே!'' என்று கோபத்துடன் சொன்னாள் அரசி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""நான் மகிழ்ச்சி அடையும் போதெல்லாம் நூறு பொற்காசுகள் பரிசு தருவது வழக்கம். இப்போது அவன் சொன்ன பதிலால் மகிழ்ச்சியடைந்து அவனுக்குப் பரிசு தந்தேன். என்ன செய்வது?'' என்றான் அரசன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டு பொற்காசுப் பைகளையும் பெற்றுக் கொண்ட மீனவன், அரசனை வணங்கி விடைபெற்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பையில் ஓட்டை இருந்ததால் திரும்பிச்செல்லும் போது ஒரு பொற்காசு கீழே விழுந்தது. இதைப் பார்த்த மீனவன் அந்தக் காசு எங்கே உள்ளது என்று தேடிக் கண்டுபிடித்துப் பையில் போட்டுக் கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை அரசனும், அரசியும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உடனே அரசி, ""நீங்கள் அவனுக்கு இருநூறு பொற்காசுகள் பரிசு தந்தீர்கள். ஓர் பொற்காசு கீழே விழுந்தால் என்ன? நம் வீரர்கள் யாரேனும் எடுத்துக் கொள்ள மாட்டார்களா? எவ்வளவு பேராசை அவனுக்கு. இதையே காரணமாகக் காட்டி அவனுக்குக் கொடுத்த பரிசைத் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்!'' என்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அரசனுக்கும் தன் மனைவி சொன்னது சரி என்றே பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீனவனை அழைத்து, ""கீழே விழந்த ஒரே ஒரு காசை ஏன் அவ்வளவு கடினப்பட்டுத் தேடினாய்? இருநூறு பொற்காசுகள் கிடைத்தும் உனக்கு நிறைவில்லையா?'' என்று கோபத்துடன் கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீண்டும் அரசனைப் பணிவுடன் வணங்கிய மீனவன், ""அரசே! அந்தப் பொற்காசு கிடைக்கவேண்டும் என்ற பேராசையால் நான் தேடவில்லை. இக்காசின் ஒரு பக்கத்தில் உங்கள் உருவமும், மற்றொரு பக்கத்தில் நம் அரசின் இலச்சினையும் பொறிக்கப்பட்டு உள்ளது. யார் காலிலேனும் இக்காசுபட்டுவிட்டால் பெருமை மிகுந்த தங்களை அவமதித்ததாக ஆகுமே என்பதற்காகத்தான் தேடினேன்!'' என்று பதில் தந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சாமர்த்தியமான இந்த பதிலைக் கேட்டு மகிழ்ந்த அரசன் அவனுக்கு மேலும் நாறு பொற்காசுகள் பரிசளிக்கக் கட்டளை இட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைக் கண்ட அரசி, இதற்குமேல் ஏதாவது யோசனை கூறினால், மேலும் பல பொற்காசுகளை இழக்க வேண்டியிருக்கும் என்று எண்ணி வாயை மூடிக்கொண்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
***</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: right;">
நன்றி தினமலர் சிறுவர்மலர் </div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23853984.post-44361469141092364422017-05-04T22:45:00.001+05:302017-05-05T09:51:58.284+05:30ஏன் மவுனம்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZmFBg87Goa4LBejx4nlJRCZB1bIHKvJkWmPvMBCixTN_uo8hAFCFHX1uUQCROIXMSSH6nCpJp6I6f9gQFdrNta11DVawK3vjffZPhOpFlJ4vP6r2_b0wMJKuSeZFKC1-_Keh3/s1600/calm-tamil-story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZmFBg87Goa4LBejx4nlJRCZB1bIHKvJkWmPvMBCixTN_uo8hAFCFHX1uUQCROIXMSSH6nCpJp6I6f9gQFdrNta11DVawK3vjffZPhOpFlJ4vP6r2_b0wMJKuSeZFKC1-_Keh3/s1600/calm-tamil-story.jpeg" /></a></div>
<div style="text-align: justify;">
உலகில் இருக்கக் கூடிய அத்தனைப் பழங்களும் ஒருமுறை ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின. தலைமையேற்றுப் பேசிய பழம், உலகில் உள்ள பழங்களில் எந்தப் பழம் அதிகச் சுவையுடையது; சிறப்புடையது? என்ற கேள்வியுடன் தன் தலைமை உரையை முடித்துக் கொண்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பழங்கள் ஒன்றுக் கொன்று அடித் தொண்டையில் குசுகுசுவெனப் பேசின.</div>
<div style="text-align: justify;">
ஆப்பிள் பழம், செர்ரிப்பழம், அன்னாசிப் பழம், கொய்யாப்பழம், மாதுளம் பழம் எல்லாம் ஒவ்வொன்றும் தானே அதிகச் சுவை உடையது என்று கூறி மார்தட்டின. ஆனால், திராட்சைப் பழம் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியுடன் இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லாப் பழங்களும் திராட்சைப் பழத்தை வியப்புடன் பார்த்த வண்ணம் இருந்தன. திராட்சைப் பழம் எதையாவது பேசும் என்று எதிர்பார்த்தன. ஆனால், அதுவோ மவுனம் காட்டியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதனால் மற்ற பழங்கள் திராட்சை பழத்தை பார்த்து இழிவாக சிரித்தன.</div>
<div style="text-align: justify;">
அப்போது பலாப்பழம் ஒன்று உருண்டு வந்தது. அது திராட்சைப் பழத்தைப் பார்த்து அன்புடன் கேட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""திராட்சையே... நீ ஏன் மவுனமாக நிற்கிறாய்? எனக்குத் தெரியும். உலகில் உள்ள பழங் களிலேயே சிறப்புப் பெற்றவன், நன்மையைச் செய்பவன், நலம் அளிப்பவன், சுவை நிரம்பியவன் நீதான் என்று! ஆனால், அதையும் தாண்டிய ஒரு சிறப்புத் தகுதி உன்னிடம் உண்டு. அதை நீயே உன் வாயால் சொல்ல வேண்டும். அப்போது தான் மற்றப் பழங்களும் உன் தகுதி பற்றி அறிந்து கொள்ளும்,'' என்று கூறியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திராட்சைப் பழம் அமைதியாகக் கூறியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""அண்ணா, நீங்கள் எல்லாருமே தனித்தனியாகவே வருகிறீர்கள். தனித்தனியாகவே விற்பனை செய்யப்படுகிறீர்கள். ஆனால், நாங்களோ, ஒரு கூட்டமாக, கொத்தாக வளருகிறோம். நாங்கள் ஒருவர் வளர்வதற்கு மற்றவர்களுக்கு இடம் தருகிறோம். விட்டுக் கொடுத்து வாழ்கிறோம். விற்பனைக்குப் போகும் போதும் கொத்தாகவே செல்கிறோம். தனியாக நாங்கள் விலை போவதில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
""எங்களைச் சாறாக்கிக் குடிக்கும் போது கொத்துக் கொத்தாகவே அழிந்து போகிறோம். வாழ்விலும், வளர்ச்சியிலும், மரணத்திலும் நாங்கள் இணைபிரியாமல் இருக்கிறோம். அதனால்தான் நாங்கள் சிறந்தவர்கள் என்ற அங்கீகாரத்தை மனிதர்களிடமிருந்து அடைந்திருக்கிறோம். வேறு காரணமில்லை! '' என்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மற்ற பழங்கள் வெட்கத்தால் தலைகுனிந்தன.</div>
<br />
<div style="text-align: right;">
நன்றி தினமலர் சிறுவர்மலர் </div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23853984.post-60443391410679762392017-04-25T11:51:00.002+05:302017-04-25T11:51:39.128+05:30 திருந்திய எழிலன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTkTXye1MnfziGnYXwhuhhPFX042OroPmIYqWnDIAD4xjn-PfZdl75wIausoUIZkglTvk2UnTj3pcm2bd2w_zIJQ55XJVhpSPPBi8xdrMRta-1Z2moeTnsYYJEpJ8d9zVX6ZuT/s1600/terenthiya+ezhilan.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTkTXye1MnfziGnYXwhuhhPFX042OroPmIYqWnDIAD4xjn-PfZdl75wIausoUIZkglTvk2UnTj3pcm2bd2w_zIJQ55XJVhpSPPBi8xdrMRta-1Z2moeTnsYYJEpJ8d9zVX6ZuT/s320/terenthiya+ezhilan.jpeg" width="297" /></a></div>
<div style="text-align: justify;">
எழிலனின் தந்தை கல் உடைக்கும் தொழிலாளி. வெயிலில் மாதம் முழுவதும் உழைத்தாலும் கூட அவருக்கு மாத வருமானம் மிகவும் குறைவுதான். அந்த வருமானத்திலேயே அவர் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகையும் கொடுக்க வேண்டும். உணவு மற்றும் இதரச் செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். தான் படும் கஷ்டங்களைத் தன்மகன் படக்கூடாது என்பதற்காக எழிலனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணினார்.<br /><br />எழிலன் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். ஏதோ பள்ளிக்குப் போகிறோம் என்ற கடமைக்காக அவன் பள்ளிக்குப் போவானே தவிர, ஒழுங்காகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற அக்கறை அவனுக்குச் சிறிது கூட இல்லை.<br /><br />பள்ளியில் சிறிதுநேரம் இருப்பான். பிறகு, வெளியில் கிளம்பிவிடுவான். சில மாணவர்களுடன் சேர்ந்து ஊர்சுற்றியும், அருகில் இருந்த திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்த்தும், வயதான பெரியவர்களைக் கேலியும், கிண்டலும் செய்தும், பொய் பேசியும் வீணாக பொழுதைப் போக்கி வந்தான். மேலும் இது குறித்து அவன் ஒருநாள் கூட கவலைப்பட்டதே இல்லை.<br /><br />தன் தந்தையிடம் செலவுக்குக் காசு வாங்கிக் கொள்வான். அவர், எழிலன் ஒரே மகன் என்பதாலும் படிக்கும் மாணவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றும் எண்ணி அவன் கேட்கும் பொழுதெல்லாம் பணம் கொடுத்து வந்தார்.<br /><br />எழிலன், தன் தந்தையார் கொடுத்த பணத்தை வாங்கிச் சாப்பிடாமல், தீய நண்பர்களுடன் சேர்ந்து சூதாட்டம் ஆடினான். மற்றவர்கள் அவன் கெட்டவன் என வெறுத்து ஒதுக்கும்படி அவனுடைய செயல்கள் இருந்தன.<br /><br />அவனுடைய வகுப்பாசிரியர், அவனுடைய நடவடிக்கைகள் சரியில்லை என்று கண்டித்தார். பிறகு, அவனுடைய அப்பாவிடம் அவனைக் கண்டித்து வளர்க்குமாறும் சொன்னார். ஆனால், இவற்றால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. எழிலனின் தந்தையார் அவனுடைய செயல்களால் பெரிதும் மனம் வருந்தினார்.<br /><br />ஒருநாள் காவல்துறையினர் 10 பேரை சாலையில் அடித்து உதைத்தபடி, இழுத்துச் சென்று கொண்டிருந்தனர்.<br /><br />இதை பார்த்த எழிலன் கூடியிருந்தவர்களிடம், ''அவர்களை ஏன் காவல் துறையினர் அடிக்கிறார்கள்?'' என்று கேட்டான்.<br /><br />''அவர்கள் சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தவர்கள்,'' என்று கூறினர்.<br />பலநாள்கள் அவர்கள் அகப்படவில்லையென்றும், இன்று வகையாக அகப்பட்டுக் கொண்டார்கள் என்றும் அவர்கள் அவனிடம் மேலும் கூறினர்.<br /><br />அதைக் கேட்டதும் எழிலனுக்கு உதறல் எடுத்தது. 'மற்றவர்கள் வெறுக்கும் படி நடந்தால் இப்படித்தான் உதைபட வேண்டும். போலிருக்கிறது,' என்று எண்ணி அன்றிலிருந்து திருந்திவிட்டான்.<br /><br />அன்றிலிருந்து தீய நண்பர்களுடன் சேராமல், தந்தையிடம் பணம் வாங்காமல் பள்ளிக்கு ஒழுங்காக சென்று பாடங்களை நன்றாக படித்து வந்தான். தன் மகன் எழிலன் திருந்தியதைக் கண்ட அவன் தந்தையார் மகிழ்ந்தார்.</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23853984.post-37086183702968380512017-04-25T11:03:00.000+05:302017-04-25T11:03:13.628+05:30மன்னிப்பு - சிறுகதை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLGjwjLmfBI8e4VNvf5viiTSqVHgUyIo9br7h2gSok3KwQzK_DwpMCfhYmjPsqU07MKS0Tao0lNTYt9NEnP6c4wl89Zx1Fw4g3ga3TZMR6BLfiswd4VpiWlUU41lTI0Q_VIVAC/s1600/%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="204" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLGjwjLmfBI8e4VNvf5viiTSqVHgUyIo9br7h2gSok3KwQzK_DwpMCfhYmjPsqU07MKS0Tao0lNTYt9NEnP6c4wl89Zx1Fw4g3ga3TZMR6BLfiswd4VpiWlUU41lTI0Q_VIVAC/s320/%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இப்படி கவனம் இல்லாம ஜியாமெட்ரி பாக்ஸைத் தொலைச்சுட்டு வந்து நிக்கிறியே. இது தப்பு கோகுல். இருந்தாலும் உன்னை மன்னிச்சுடறேன். நாளைக்கு வேற ஜியாமெட்ரி பாக்ஸ் வாங்கித் தர்றேன்” என்று மகனிடம் தன் மனைவி ரேவதி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் கணேசன்.<br /><br />ரேவதி இப்படிச் சொல்வது முதல்முறை அல்ல. சில வருடங்களாகவே அவள் கோகுலிடம் இப்படித்தான் நடந்து கொள்கிறாள்.<br /><br />ஒருமுறை கோகுல் கணக்குப் பாடத்தில் தோல்வியடைந்தபோது இப்படித்தான் அவனைத் திட்டிவிட்டு, பிறகு அவனிடம் மன்னிப்பதாகச் சொன்னாள்.<br /><br />படிக்காமல் விளையாடிவிட்டு வந்தாலும், வீட்டுப் பொருட்களைச் கைதவறி உடைத்தாலும் இப்படித்தான். முதலில் அவன் செய்தது தப்பு என்று கண்டித்துவிட்டு, பிறகு மன்னித்துவிடுவதாகச் சொல்லிவிடுவாள் ரேவதி.<br /><br />“ஏன் ரேவதி! கோகுல் செய்யுற தப்புகளை எப்படியும் மன்னிக்கத்தான் போறே. பிறகு எதுக்காக அவன்கிட்டே அது தப்புன்னு சொல்லித் தேவையில்லாம குற்ற உணர்ச்சியைத் தூண்டி விடுறே?” - ரேவதியைத் தனியாக அழைத்து கேட்டான் கணேசன்.<br /><br />“கோகுல் இப்ப டீன்ஏஜ்ல இருக்கான். இனி மேற்படிப்பு, வேலைன்னு வாழ்க்கையில எத்தனையோ பேரைச் சந்திக்கப் போறான். எத்தனையோ சூழல்களை எதிர்கொள்ளணும். இப்ப அவன் செய்யுற தப்புகளை தப்புன்னு நாமதான் சுட்டிக் காட்டணும். அப்பதான் அதை இனி செய்யாம கவனமா இருப்பான். அதேநேரம் அவனை நாம மன்னிக்கிறோம்னு அவனுக்குத் தெரியணும்.<br /><br />அப்பதான் மற்றவங்க அறியாம செய்யுற தப்புகளை அவன் மன்னிக்கவும் கத்துக்குவான். தப்பு செய்யாதவங்க மட்டுமில்லங்க, மற்றவங்களை மன்னிக்கவும் தெரிஞ்சவங்கதான் முழு மன ஆரோக்கியத்தோட வாழ முடியும். அதுக்காகத்தான் இந்தப் பயிற்சி!” சொன்ன மனைவி ரேவதியை புருவம் உயர்த்தி மகிழ்ச்சியோடு பார்த்தான் கணேசன்.</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-23853984.post-26746138623162901022016-10-04T12:15:00.000+05:302017-05-04T22:47:49.287+05:30எத்தன் செய்த தந்திரம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlwvXIhPiYfOp3Ol5-q_7Ptp_qsGo9uaRTukVU9s-6nRhTzdvdshkDyYnaG17nhmkvVtOvdBF8KwVqebtZufVTxhGeXWEK5jpCugs8dQ-GUdzQ7wLClLri5AdG2V89So06qpUO/s1600/trick_tamil_story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="207" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlwvXIhPiYfOp3Ol5-q_7Ptp_qsGo9uaRTukVU9s-6nRhTzdvdshkDyYnaG17nhmkvVtOvdBF8KwVqebtZufVTxhGeXWEK5jpCugs8dQ-GUdzQ7wLClLri5AdG2V89So06qpUO/s320/trick_tamil_story.jpeg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
ஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து
வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம் கிடைக்கும்
போதெல்லாம், ஒருவரை ஒருவர் ஏமாற்றப் பார்ப்பது வழக்கம்.</div>
<div style="text-align: justify;">
<br />
ஒரு நாள்,
வணிகர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட கொமுரு என்ற திருடன்,
"அவர் வீட்டிற்குச் சென்றால் ஏதாவது சுருட்டலாம்' என்று நினைத்து அங்கே
சென்றான்.</div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<br />
வணிகர் பெரும் பணக்காரர். அதனால், அங்கு ஏகப்பட்ட கூட்டம்
இருந்தது. அங்கு சென்று ஒரு ஓரமாய் உட்கார்ந்த அவன், சற்றுத் தொலைவில்
கூட்டத்தோடு கூட்டமாய் நின்றிருந்த எத்தனைப் பார்த்ததும் திடுக்கிட்டுப்
போனான்.</div>
<div style="text-align: justify;">
<br />
இந்த எத்தனும் கூட நம்மைப் போலவே இந்த வீட்டில் திருட
வந்துள்ளான் என்பதைப் புரிந்துகொண்ட கொமுரு, அவன் எப்படி இங்கிருப்பவர்களை
ஏமாற்றித் திருடப் போகிறான் என்று தான் பார்ப்போமே என்று, கூர்ந்து
கவனிக்கத் தொடங்கினான்.</div>
<div style="text-align: justify;">
<br />
வீட்டின் உள்ளே உள்ள ஒரு இருட்டறையில், ஒரு
பெரிய கட்டிலின் மீது, வணிகரின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. அந்த
அறைக்குள், மினுக் மினுக்கென்று ஒரு விளக்கு மட்டும் வெளிச்சம்
காட்டிக்கொண்டு இருந்தது. வணிகர் கிடத்தப்பட்டிருந்த கட்டிலுக்குக் கீழே
ஒரு பெரிய மரப்பெட்டி கேட்பாரற்றுக் கிடந்தது.</div>
<div style="text-align: justify;">
<br />
கூட்டத்தோடு கூட்டமாய்
நின்றிருந்த எத்தன் இப்போது, மெல்ல அந்தக் கட்டிலின் ஓரமாகச் சென்று, தான்
கொண்டு வந்த மாலையை, வணிகர் மீது போட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br />
பிறகு, தன்னை யாராவது
பார்க்கின்றனரா என்று சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துக் கொண்டான்.
யாரும் பார்க்கவில்லை என்று தெரிந்து கொண்டதும், கட்டிலுக்குக் கீழே உள்ள
மரப்பெட்டிக்குள் பொசுக்கென்று புகுந்து கொண்டு விட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br />
எத்தனின்
இந்தச் செய்கைகளை எல்லாம், சற்று தொலைவில் இருந்தவாறு வைத்த கண் வாங்காமல்
கொமுரு பார்த்துக் கொண்டிருந்தான். இறந்து போய்க் கட்டிலில் கிடந்த வணிகர்,
இப்போது திடீரெனப் பேசத் தொடங்கினார். அங்கிருந்த எல்லாருக்கும் ஒரே
ஆச்சர்யம்.</div>
<div style="text-align: justify;">
<br />
வணிகரா பேசுகிறார்! வணிகரைப் போல் குரலை மாற்றி, அந்தக்
கட்டிலின் கீழே கிடந்த மரப்பெட்டிக்குள் புகுந்திருந்த எத்தனல்லவா இப்படிப்
பேசுகிறான். வணிகர் பேசத் தொடங்கியதும், அந்த வீட்டின் அழுகுரல்கள்
அனைத்தும் இப்போது ஓய்ந்து போயின.</div>
<div style="text-align: justify;">
<br />
ஆம்... போன உயிரல்லவா மீண்டும்
திரும்பி வந்திருக்கிறது. வணிகர், அவர் மனைவியை மட்டும் அருகே வரும்படி
கூப்பிட்டார். அவளும், கட்டிலின் ஓரமாய் வந்து நின்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br />
""நான் இறந்து
போய்விட்டதென்னவோ உண்மை தான். ஆனால், சிறிது நேரம் மட்டும் எமதூதர்கள், என்
உயிரைச் சற்று விட்டுப் பிடித்து இருக்கின்றனர். நான், போன மாதம் பக்கத்து
ஊரு பங்காரு நாயுடுவிடம், ஐநூறு வெள்ளிப் பணத்தைக் கடனாக
வாங்கியிருந்தேன். அதைத் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்!'' என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br />
இப்படி வணிகர் கூறியதும், ""ஆமாம்! சாகும்போது கடனோடு சாகக்கூடாது,'' என்றனர் அந்தக் கட்டிலைச் சுற்றி நின்ற கூட்டத்தினர்.</div>
<div style="text-align: justify;">
<br />
"அது
சரி வணிகரே... நீங்க சொன்ன அந்தப் பங்காரு நாயுடுவை, நாங்கள் எப்படி
அடையாளம் கண்டு கொள்வது?'' என்று, அங்கிருந்தவர்களில், விஷயம் தெரிந்து
ஒருவர் தான் இப்படிக் கேட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br />
""இப்போது நண்பகல் ஆகிறதல்லவா... இன்று
மாலை ஆறு மணிக்கெல்லாம் இங்கே, வெள்ளை வேட்டி, சிவப்புச் சட்டை,
நீலத்துண்டு அணிந்து, கையில் வெற்றிலை டப்பாவுடன் ஒருவர் வருவார்.
நெற்றியில் பெரிய நாமம் கூடப் போட்டிருப்பார். அவர் தான் பங்காரு நாயுடு!''
என்று முடித்தார், கட்டிலில் பிணமாய்க் கிடந்த வணிகர்.</div>
<div style="text-align: justify;">
<br />
""சரிங்க... அவரிடமே கொடுத்துடறேன்,'' என்று தலையாட்டினாள் வணிகரின் மனைவி.<br />
அதற்குப் பிறகு வணிகருக்குப் பேச்சுமில்லை; மூச்சுமில்லை.</div>
<div style="text-align: justify;">
<br />
கட்டிலுக்குக்
கீழே உள்ள அந்த மரப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்டு எத்தன் நடத்தும் இந்த
நாடகத்தை, சற்று தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கொமுரு, அந்தத்
திருக்கடையூர் எத்தனின் சாமர்த்தியத்தை எண்ணி மிகவும் வியந்து போனான்.</div>
<div style="text-align: justify;">
<br />
கட்டிலுக்குக்
கீழே இருக்கும் இந்த எத்தன், இனி யாரும் அறியாதபடி முதலில் வெளியே வந்தாக
வேண்டும். பின்னரே, பங்காரு நாயுடு போல வேஷம் போட்டு ஏமாற்ற முடியும். ஏன்,
நாமே இந்த வேஷத்தைப் போட்டு, இங்கிருப்பவர்களை ஏமாற்றி, இந்த ஐநூறு
வெள்ளிப் பணத்தையும் அப்படியே அடித்துக்கொண்டு போகக்கூடாது. இப்படி
யோசிக்கலானான் கொமுரு. அவ்வளவுதான்... உடனே புறப்பட்டான் அந்த எண்ணத்தைச்
செயலாக்க.</div>
<div style="text-align: justify;">
<br />
ஒரு துணிக்கடைக்குச் சென்று, வெள்ளைவேட்டி, சிவப்புச்சட்டை,
நீலத்துண்டு போன்றவற்றை வாங்கி அணிந்து கொண்டான். நெற்றியில் பெரிய
நாமமும், கையில் வெற்றிலை டப்பாவுடனும், வணிகர் வீடு போய்ச் சேர்ந்தான்.<br />
பங்காரு நாயுடுவைப் பார்த்ததுமே, மறுபேச்சின்றி, ஐநூறு வெள்ளிப் பணத்தை அப்படியே மூட்டையாகக் கட்டிக் கொடுத்தாள் வணிகரின் மனைவி.</div>
<div style="text-align: justify;">
<br />
அதை
வாங்கிக்கொண்ட கொமுரு, அங்கிருந்து உடனே புறப்படத் தொடங்கினான் வேக
வேகமாக. அவன் புறப்படத் தொடங்கிய அந்தச் சமயத்தில் தான், கட்டிலுக்குக்
கீழே ஒளிந்திருந்த எத்தன், மெல்ல வெளியே வந்தான். அப்படி வெளியே வந்தவன்,
தான் தெரிவித்த அதே பங்காரு நாயுடு மாதிரியான தோற்றத்தோடு கூடிய ஒருவன்
இப்போது மெல்ல நழுவிக்கொண்டு இருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டுப்
போனான்.</div>
<div style="text-align: justify;">
<br />
நம்முடைய திட்டத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டு விட்ட எவனோ
ஒருவன் தான், இப்படி இங்கிருப்பவர்களையெல்லாம் ஏமாற்றிப் பண மூட்டையோடு
நழுவிக்கொண்டிருக்கிறான் எனச் சட்டென உணர்ந்தான் எத்தன். அவ்வளவுதான், பண
மூட்டையோடு நழுவும் அவனை விரட்டிப் பிடிப்பதென முடிவு செய்தான்.<br />
அடுத்த நொடியே, முடிவு செயலானது.</div>
<div style="text-align: justify;">
<br />
""ஏய்,
ஏய்...'' என்று கத்திக்கொண்டு எத்தன், கொமுருவின் பின்னால் ஓடத்
தொடங்கினான். இந்தச் சத்தத்தைக் கேட்ட பிறகு தான், சட்டென்று திரும்பிப்
பார்த்தான், பண மூட்டையோடு நழுவிக் கொண்டிருந்தான் எத்தன்.</div>
<div style="text-align: justify;">
<br />
அவ்வளவுதான்!
அப்படியே அதிர்ச்சி அடைந்து, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, தலைதெறிக்க
ஓடத் தொடங்கினான் கொமுரு. இப்போது, எத்தன் விடுவதாகவும் தெரியவில்லை,
எத்தன் நிற்பதாகவும் தெரியவில்லை. இருவரும் ஓடிக்கொண்டே இருந்தனர்.<br />
இப்படி
இருவரும் ஓடிக்கொண்டே இருக்கும்போது, ஊருக்கு வெளியே சற்று தூரத்தில்,
வைக்கோல் போர்கள் இருந்தன. "இந்த வைக்கோல் போருக்குள் நுழைந்துகொண்டு
விட்டால், யாராலும் கண்டுபிடிக்க முடியாது' என்று நினைத்த கொமுரு, மறுகணமே,
வைக்கோல் போருக்குள் புகுந்து மறைந்துவிட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br />
கொமுரு விரட்டியபடி,
அந்தக் களத்துமேட்டிற்கு வந்து சேர்ந்த எத்தன், பணமூட்டையை எடுத்து கொண்டு
ஓடி வந்தவன், திடீரெனக் காணாமல் போனது பற்றிக் கவலைப்படலானான். எப்படியும்,
இந்த வைக்கோல் போர்களில் தான் அவன் ஒளிந்திருக்க வேண்டும் என்று,
கடைசியில் ஒரு முடிவுக்கும் வந்த எத்தன், அவனை எப்படிக் கண்டுபிடிப்பதென்று
யோசிக்கலானான்.</div>
<div style="text-align: justify;">
<br />
எத்தன் இப்படி யோசித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக, ஆட்டுக் கிடாய்களை ஓட்டிக்கொண்டு ஓர் இடையன் வந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br />
அவனிடம், ""ஆட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் சலங்கையில், ஐந்து மணிகளை மட்டும் இரவல் தர முடியுமா?'' என்று கேட்டான் எத்தன்.</div>
<div style="text-align: justify;">
<br />
இடையன்
கொடுத்த சலங்கை மணிகளைக் கயிற்றில் கோத்து, தன் கழுத்தில் கட்டிக்
கொண்டான் எத்தன். பின், அந்த களத்துமேட்டிலிருந்த ஒவ்வொரு வைக்கோல் போரின்
மேலும், மாடு உராய்வது போல உராயத் தொடங்கினான்.</div>
<div style="text-align: justify;">
<br />
அப்படி அவன் உராயத் தொடங்கியபோது, சலங்கை மணிகள் அவ்வப்போது ஓசையை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.</div>
<div style="text-align: justify;">
<br />
இப்படி
ஒவ்வொரு போராகச் சென்று எத்தன் உராய்ந்து கொண்டு வரும் போது, கொமுரு
ஒளிந்திருந்த அந்த வைக்கோல் போரும் வந்தது. தான் ஒளிந்திருக்கும் அந்த
வைக்கோல் போரில் வந்து உராய்வது ஒரு மாடு தான் என்று நினைத்த கொமுரு, ""சே,
சே... இந்த சனியன்பிடித்த மாடு, ஏன் தான் இப்படி வந்து உராய்கிறதோ
தெரியவில்லையே!'' என்று கூறினான் போருக்குள் இருந்தபடியே.</div>
<div style="text-align: justify;">
<br />
அவ்வளவுதான்...
பண மூட்டையோடு வந்தவன், இந்த போருக்குள் தான் இருக்கிறான் என்று
புரிந்துகொண்ட எத்தன், ""எழுந்து வாடா வெளியே!'' என்று அதட்டினான்.</div>
<div style="text-align: justify;">
<br />
ஒளிந்திருந்த
இடம் தெரிந்துவிட்டதால், வேறு வழியின்றி வெளியே வந்தான் கொமுரு. ""அடடே...
நீ தானா!'' என்று வியந்தான் கொமுருவைப் பற்றி முன்பே தெரிந்து வைத்திருந்த
எத்தன்.</div>
<div style="text-align: justify;">
<br />
""ஆமாம்... நானேதான்!'' என்றான், அசட்டுத் சிரிப்புடன் கொமுரு.</div>
<div style="text-align: justify;">
<br />
பிறகென்ன, வணிகரின் ஐநூறு பணமும், ஆளுக்குப் பாதியானது.<br />
<br />
***<br />
<br />
நன்றி தினமலர் சிறுவர்மலர் </div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-23853984.post-47124532281614582612015-11-17T10:20:00.000+05:302015-11-17T10:20:21.810+05:30முட்டாள் வேலைக்காரன்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigGusxQNN5573KG-gVGiE5OAlnYUEB5J7e0pT8-yhyphenhyphenGimJEntndEFCizv8tS6QhDymEtErAKmQXqR-Ln_23VThGlMupaMM0mTK_lTkJDQ4baUced-nf7axgyjNZaEu_qLMCXZ3/s1600/stupid-servant-kids-tamil-story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="229" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigGusxQNN5573KG-gVGiE5OAlnYUEB5J7e0pT8-yhyphenhyphenGimJEntndEFCizv8tS6QhDymEtErAKmQXqR-Ln_23VThGlMupaMM0mTK_lTkJDQ4baUced-nf7axgyjNZaEu_qLMCXZ3/s320/stupid-servant-kids-tamil-story.jpeg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன்</div>
<div style="text-align: justify;">
<br />ஒருநாள் அவனை அழைத்து, "நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ... அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் நீயும் மரங்களை வெட்டிக்கொண்டு வா!'' என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br />அப்படியே அவனும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். அங்கே சிலர் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டு இருந்தனர். சிலர், கீழே கிடக்கும் மரங்களை முயன்று வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்ததும் வேலைக்காரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br />"என்ன இவர்கள் எல்லாரும் முட்டாள்களாக இருக்கின்றனர். மரம் வெட்டும் போதே அதற்குக் கீழாக வண்டியை வைத்தால் மரம் அதில் சரியாக விழும். வீனாக ஒரு முறை பூமியில் கிடக்கும் மரத்தை வண்டியில் ஏற்ற வேண்டாமே!' என்று நினைத்தான்.</div>
<div style="text-align: justify;">
<br />"என் திட்டத்தை இவர்கள் கண் முன்னாலேயே செய்து காட்டி, நான் எத்தகைய அறிவாளி என்பதைப் புரிய வைப்பேன்' என்ற எண்ணத்தில், தான் வெட்ட வேண்டிய பெரிய மரத்தை தேர்ந்தெடுத்தான்.</div>
<div style="text-align: justify;">
<br />கோடாரியால் அந்தப் பனை மரத்தின் அடிப்பகுதியைப் பாதி அளவு வெட்டி முடித்தான். பிறகு, அந்த மரம் விழக்கூடிய இடத்திற்கு நேராக மாட்டுடன் வண்டியை நிறுத்தினான். மரம் வெட்டிக் கொண்டிருந்த மற்றவர்கள், "ஏன் இவன் இப்படிப் பைத்தியக்கார வேலை செய்கிறான்!' என்று நினைத்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br />சிறிது நேரத்தில் அந்த மரம், "சடசட'வென்ற சத்தத்துடன் வண்டியின் மீது வேகமாக விழுந்தது. அவ்வளவுதான், வண்டி தூள் தூளானது. கால் உடைந்து குற்றுயிரும் குலை உயிருமாக மாடு துடித்துக் கொண்டிருந்தது. இதைக்கண்டு அவன் திகைத்து விட்டான். தன் திட்டத்தில் என்ன குறை என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br />"என் திட்டம் நல்ல திட்டம் தான். வண்டிக்குத்தான் வலிமை இல்லாமல் போய்விட்டது' என்ற முடிவுடன் வீடு திரும்பினான். நடந்ததை அறிந்த வணிகன், முட்டாளாக இருக்கிறாயே! இப்படி செய்யலாமா? என்று வேலைக்காரனைத் திட்டினான்.</div>
<div style="text-align: justify;">
<br />சில நாட்கள் சென்றன. திடீரென்று அந்த ஊரில் மண்ணெண்ணெய் பஞ்சம் வந்துவிட்டது.</div>
<div style="text-align: justify;">
<br />"தன்னிடம் இருக்கும் இருபத்தைந்து பீப்பாய் எண்ணெயைப் பதுக்கி வைத்தால் நிறைய லாபம் கிடைக்கும்!' என்று நினைத்தான் வணிகன். உடனே வேலைக்காரனை அழைத்து, ""கடையில் இருக்கும் மண்ணெண்ணெய் எல்லாவற்றையும் இன்றிரவு நம் தோட்டத்தில் பள்ளம் தோண்டிப் புதைத்துவிடு. யாருக்கும் தெரியக் கூடாது!'' என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br />வணிகன் சொன்னபடியே, நள்ளிரவில் பெரிய பள்ளம் தோண்டினான் வேலைக்காரன். ஒவ்வொரு பீப்பாயாக உருட்டிச் சென்று அதிலுள்ள எண்ணெயைப் பள்ளத்தில் ஊற்றினான். இப்படியே எல்லாப் பீப்பாய்களில் உள்ள எண்ணெயையும் ஊற்றி முடித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br />இப்போது அவன் உள்ளத்தில், "இந்தக் காலிப் பீப்பாய்களை என்ன செய்வது? இது குறித்து முதலாளி ஒன்று சொல்லவில்யலையே!' என்ற சிந்தனை எழுந்தது.</div>
<div style="text-align: justify;">
<br />"சரி, அவரையே கேட்டு விடுவோம்' என்ற எண்ணத்தில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த வணிகனை எழுப்பினான்.</div>
<div style="text-align: justify;">
<br />"ஐயா! நீங்கள் சொன்னபடி மண்ணெண்ணெயைப் பள்ளம் தோண்டிப் புதைத்துவிட்டேன். காலி பீப்பாய்களை என்ன செய்வது என்று கேட்டான். வணிகனுக்குச் சிறிது சிறதாக உண்மை புலப்படத் தொடங்கியது. ஐயோ, "மண்ணெண்ணெய் எல்லாம் பேச்சே!' என்று அலறிய வணிகன், அன்றே அவனை வேலையிலிருந்து நீக்கினான்.".</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றி தினமலர்</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-23853984.post-28142061523456580942015-11-11T12:12:00.002+05:302015-11-11T12:12:48.861+05:30நோ காகம் அண்ணா!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPmVHFe4QW2HnyKsUGXH02hRzkBofjrAlFik3f2z9s4I_lSqvUe5hfFgpSANhOEtFszLh_dYaVAmnwPvMxmbGbo3LK8oTq3lCXFTrZXB-Snu1pfAq1HAjL-XsGXl60r4iHaAG5/s1600/crow_rat_kids_tamil_story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPmVHFe4QW2HnyKsUGXH02hRzkBofjrAlFik3f2z9s4I_lSqvUe5hfFgpSANhOEtFszLh_dYaVAmnwPvMxmbGbo3LK8oTq3lCXFTrZXB-Snu1pfAq1HAjL-XsGXl60r4iHaAG5/s1600/crow_rat_kids_tamil_story.jpeg" /></a></div>
<div style="text-align: justify;">
அந்த கல்யாண சத்திரத்தில் விதவிதமான உணவு பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. எந்த உணவை சுவைக்கலாம் என யோசித்த நேரத்தில், சமையல்காரன் வந்துவிடவே தப்பித்தோம், பிழைத்தோம் என மண்டபத்தை விட்டு வெளியே ஓடி வந்தது எலி.</div>
<div style="text-align: justify;">
<br />அந்த நேரத்தில் தெருவோரமாக இருந்த மதில் மீது ஒரு காகம் அமர்ந்திருந்தது. அந்தக் காகம் எலியைக் கண்டுவிட்டது. எலியைக் கண்ட மகிழ்ச்சியில் அந்தக் காகமானது, எலியின் அருகே பறந்து வந்து அதனை விரட்டிப் பிடிக்க முயன்றது. தனது தடித்த அலகினால் எலியைக் கொத்தப்போனது.</div>
<div style="text-align: justify;">
<br />காகம் தன்னைத்தாக்க வருவதைக் கண்ட எலி கீச்... கீச்... என்று அலறியபடி பரிதாபமாகக் காகத்தைப் பார்த்தது.</div>
<div style="text-align: justify;">
<br />""காகம் அண்ணா! நீங்கள் செய்வது சரிதானா? மண்டபத்தில் உள்ளே வந்த மனிதருக்குப் பயந்து தெருவில் ஓடிவந்தேன். இங்கே தெருவில் நீங்கள் என்னைப் பிடித்துக் கொல்ல நினைக்கிறீர்களே... என் மீது கொஞ்சமாவது கருணை காட்ட மாட்டீர்களா?'' என்று அன்போடு கேட்டது.</div>
<div style="text-align: justify;">
<br />அதனைக் கேட்ட காகம், ""எலியே! எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. என் பசிக்கு இப்போது உணவு தேவைப்படுகிறது. அதனால் உன்னை இரையாகக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். அதனால், அடம்பிடிக்காமல் எனக்கு இரையாகிவிடும்!'' என்று கண்டிப்புடன் கூறியது.</div>
<div style="text-align: justify;">
<br />""காகம் அண்ணா! உங்கள் பேச்சிலும் ஒரு வித நியாயம் இருப்பதாக உணர்கிறேன். ஆனால், உங்கள் குஞ்சுக்கு இதைப்போல் ஓர் ஆபத்து நேர்ந்து அது வேறு ஏதாவது பறவையிடமோ, விலங்குகளிடமோ சிக்கிக் கொண்டால் அது என்ன பாடுபடும். உங்கள் குஞ்சு போன்று என்னை நினைத்து எனக்கு உயிர் பிச்சை கொடுங்களேன்!'' என்று பரிவோடு கெஞ்சியது எலி.</div>
<div style="text-align: justify;">
<br />எலியின் சாமர்த்தியமான பேச்சினால் காகத்தின் மனது இளகிவிட்டது. சிறிது நேரம் யோசனை செய்த காகம் எலியைப் பார்த்து, ""எலியே! உன்னைப் பார்த்த போது எப்படியாவது உன்னை சாப்பிட்டு விட வேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றியது.</div>
<div style="text-align: justify;">
<br />""உன் அன்பான வார்த்தைகளைக் கேட்கிற போது அந்த எண்ணம் என் மனதைவிட்டு அகன்றுவிட்டது. நீ உன் சாதுர்யமான பேச்சினால் என் மனதினுள் இருக்கிற பாச உணர்ச்சியினைத் தட்டி எழுப்பிவிட்டாய். இனிமேல் நீ பயமில்லாமல் செல்லலாம்!'' என்று கூறியபடி வேறு இரையைத் தேடிப் பறந்து சென்றது.</div>
<div style="text-align: justify;">
<br />எலியும் உயிர்பிழைத்த மகிழ்ச்சியில் தன் இருப்பிடத்தை நோக்கி வேகமாக ஓடியது. அன்பான பேச்சினால் எதிரியின் மனதைக் கூட மாற்றிவிடலாம் என்பதை அந்த எலி மிக நன்றாகவே அன்று புரிந்து கொண்டது. அன்புக்கு இத்தனை பெரிய சக்தியிருப்பதையும், அது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாக அறிந்து கொண்டது. தானும் பிறரிடம் அன்போடு இருக்க வேண்டும் என்று அன்று முதல் அது உறுதி பூண்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றி தினமலர் சிறுவர்மலர்</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-23853984.post-77184104760725402072015-10-27T11:31:00.000+05:302015-10-27T11:31:20.742+05:30உங்க பேரைச் சொல்லி....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkzxMl7DxcbCoNgE51DyFmon8X_aiPquNkZDAmSzkkZ2iY124qhaAma1YjFLSfJ3K_oyi_dKv4lYT_x8uGBFMgZJZkBPrIyJ6D0U8QNz-UbcsJxDzktlOvcJrxKkIr9QvUlwR7/s1600/kids+tamil+story+collection.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkzxMl7DxcbCoNgE51DyFmon8X_aiPquNkZDAmSzkkZ2iY124qhaAma1YjFLSfJ3K_oyi_dKv4lYT_x8uGBFMgZJZkBPrIyJ6D0U8QNz-UbcsJxDzktlOvcJrxKkIr9QvUlwR7/s1600/kids+tamil+story+collection.jpeg" /></a></div>
<div style="text-align: justify;">
கந்தசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் சென்றார். அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார்.</div>
<div style="text-align: justify;">
<br />""உங்களுக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள்?'' என்று அன்புடன் கேட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br />""இந்த ஊர் பண்ணையார் கொடுமைக்காரராக இருக்கிறார். எங்களிடம் அதிக வேலை வாங்கு கிறார். கூலியும் சரியாக தருவது இல்லை. அவரை எதிர்க்க எங்களுக்குத் துணிவு இல்லை. நாங்கள் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறோம்,'' என்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br />அவர்கள் துன்பத்தைப் போக்க வேண்டும், அந்தப் பண்ணையாருக்கு நல்ல பாடம் கற்றுத் தர வேண்டும் என்று நினைத்தார் கந்தசாமி.</div>
<div style="text-align: justify;">
<br />""அந்த பண்ணையார் எப்படிப்பட்டவர்? அவரைப் பற்றிச் சொல்லுங்கள்,'' என்று கேட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br />""அவர் சண்டைச் சேவல்கள் வைத்திருக்கிறார். எங்கே சேவல் சண்டை நடந்தாலும் அதில் அவர் கலந்து கொள்வார்,'' என்றான் அவர்களில் ஒருவன்.</div>
<div style="text-align: justify;">
<br />""இந்தச் செய்தி எனக்குப் போதும். நான் சொல்வது போலச் செய்யுங்கள். உங்கள் துன்பத்தை நான் தீர்த்து வைக்கிறேன்,'' என்றார் கந்தசாமி.<br />""நீங்கள் எது சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம்,'' என்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br />""எனக்கு ஒரு சண்டைச் சேவலும், இருநூறு பணமும் தேவை,'' என்றார்.<br />தன் திட்டத்தை அவர்களிடம் சொன்னார்.</div>
<div style="text-align: justify;">
<br />உடனே அவர்கள் அனைவரும் சேர்ந்து, இருநூறு பணம் திரட்டினர். ஒரு சண்டைச் சேவலையும் அவரிடம் தந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br />அவர்களில் நால்வரை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டார் கந்தசாமி.<br />பண்ணையாரின் வீட்டிற்குச் சென்றார். அவர் கையில் சண்டைச் சேவல் இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br />பண்ணையாரை வணங்கிய அவர், ""ஐயா! சேவல் சண்டை என்றாலே உங்கள் பெயர் எங்கும் பரவி உள்ளது. நேற்று எங்கள் ஊரில் சேவல் சண்டை நடந்தது.<br />""அதில் உங்கள் பெயரைச் சொல்லி, இந்தச் சேவலை சண்டைக்கு விட்டேன். இந்தச் சேவல் வெற்றி பெற்று விட்டது. பரிசுப் பணமாக நூறு பணம் கிடைத்தது. உங்களால் கிடைத்த பரிசுப் பணம் இது. உங்களிடம் பணத்தைத் தர வந்தேன்,'' என்றார்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />பணத்தை அவரிடம் நீட்டினார்.</div>
<div style="text-align: justify;">
<br />பணத்தைப் பெற்றுக் கொண்டார் பண்ணையார்.</div>
<div style="text-align: justify;">
<br />""உன் சண்டைச் சேவல் நன்றாக உள்ளது. நல்ல பயற்சியும் தந்துள்ளாய். என் பெயரைச் சொல்லிப் போட்டியில் கலந்து கொள். மேலும், மேலும் உனக்கு வெற்றி கிடைக்கும்,'' என்று பாராட்டினார்.</div>
<div style="text-align: justify;">
<br />அடுத்த வாரம் மீண்டும் அங்கு வந்தார் கந்தசாமி.</div>
<div style="text-align: justify;">
<br />அவருடன் அந்த ஊரைச் சேர்ந்த வேறு நான்கு பேர் வந்திருந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br />பண்ணையாரை வணங்கிய அவர், ""உங்கள் பெயரைச் சொல்லி நேற்றும் சேவல் சண்டையில் கலந்து கொண்டேன். எனக்கே வெற்றி கிடைத்தது. பரிசாகக் கிடைத்த நூறு பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்,'' என்று தந்தார்.<br />அவர் சூழ்ச்சியை பண்ணையார் அறியவில்லை. அந்தப் பணத்தையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.</div>
<div style="text-align: justify;">
<br />அடுத்த வாரம் கந்தசாமி நான்கு பேருடன் பண்ணையாரிடம் வந்தார்.<br />அவர் கையில் சண்டைச் சேவல் இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br />இதை பார்த்த பண்ணையார், ""என்ன வெறுங்கையுடன் வந்திருக்கிறாய்? சண்டைச் சேவல் எங்கே?'' என்று கேட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br />""நேற்று நடந்த போட்டியில் என் சண்டைச் சேவல் தோற்று இறந்துவிட்டது. கண்டிப்பாக அது வெற்றி பெறும் என்று நம்பினேன். அதனால் இவர்கள் ஒவ்வொருவரிடமும் நூறு பொற்காசு பந்தயம் வைத்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br />இதுவரை வெற்றி பெற்றுக் கிடைத்த பணத்தை உங்களிடம்தான் தந்தேன். இப்போது தோற்று விட்டேன். இவர்களுக்கு நீங்கள்தான் பொற்காசுகளைத் தர வேண்டும்,'' என்றார் கந்தசாமி.</div>
<div style="text-align: justify;">
<br />""நீ தோற்றதற்கு நான் எதற்கு பொற்காசுகள் தர வேண்டும்? என்ன விளையாடுகிறாயா?'' என்று கோபத்துடன் கத்தினார் பண்ணையார்.</div>
<div style="text-align: justify;">
<br />""சேவல் வெற்றி பெற்ற போது நீங்கள் எப்படிப் பணத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். இதேபோலச் சொல்லி அப்போது நீங்கள் மறுத்து இருக்க வேண்டாமா?</div>
<div style="text-align: justify;">
<br />""வெற்றி பெற்றால் பணம் உங்களுக்கு. தோல்வி அடைந்தால் இழப்பு எனக்கா? இது என்ன நியாயம்? நீங்கள் பணத்தைப் பெற்றதற்கு இந்த ஊரில் நிறைய சாட்சிகள் இருக்கின்றன. மரியாதையாக இவர்கள் நால்வருக்கும் ஆளுக்கு நூறு பொற்காசுகள் தாருங்கள். இல்லை என்றால் ஊரைக் கூட்டி, உங்களை அவமானப்படுத்துவேன். உங்களிடமிருந்து, கட்டாயப்படுத்தி அந்த பொற்காசுகளை வாங்குவேன்,'' என்றார் கந்தசாமி.</div>
<div style="text-align: justify;">
<br />அப்போதுதான் பண்ணையாருக்கு அவரின் சூழ்ச்சி புரிந்தது. ஊர் மக்களிடம் தன் பேச்சு எடுபடாது என்பதையும் அறிந்து கொண்டார்.</div>
<div style="text-align: justify;">
<br />வேறு வழியில்லாத அவர், நானூறு பொற்காசுகளை அவர்களிடம் தந்தார். "பேராசையினால் இப்படிப்பட்ட இழப்பு வந்ததே' என்று வருந்தினார் பண்ணையார்.</div>
<div style="text-align: justify;">
<br />அந்தப் பொற்காசுகளை ஊர் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தார் கந்தசாமி.</div>
<div style="text-align: justify;">
<br />""அந்த பண்ணையாருக்கு இந்த அடி போதும்... இனி அவர் உங்களைத் துன்பப் படுத்த மாட்டார். மகிழ்ச்சியாக இருங்கள்,'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றி சிறுவர்மலர்</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-23853984.post-17756687825964448012015-10-26T12:12:00.002+05:302015-10-26T12:12:34.874+05:30எத்தன் செய்த தந்திரம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFcEoXLvovzMiKriDIbrkP441VvtrmuwlYFuzUPrmz4u7lH2Al3aFZ1ReTlRHrmvwFREmHhSBflENMGG5lowM4IGyg8FnWC87XqATRze9_RNql9itQHwBY0o_FLdEICE_NAboO/s1600/juggler+tamil+story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="207" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFcEoXLvovzMiKriDIbrkP441VvtrmuwlYFuzUPrmz4u7lH2Al3aFZ1ReTlRHrmvwFREmHhSBflENMGG5lowM4IGyg8FnWC87XqATRze9_RNql9itQHwBY0o_FLdEICE_NAboO/s320/juggler+tamil+story.jpeg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
ஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம் கிடைக்கும் போதெல்லாம், ஒருவரை ஒருவர் ஏமாற்றப் பார்ப்பது வழக்கம்.</div>
<div style="text-align: justify;">
<br />ஒரு நாள், வணிகர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட கொமுரு என்ற திருடன், "அவர் வீட்டிற்குச் சென்றால் ஏதாவது சுருட்டலாம்' என்று நினைத்து அங்கே சென்றான்.</div>
<div style="text-align: justify;">
<br />வணிகர் பெரும் பணக்காரர். அதனால், அங்கு ஏகப்பட்ட கூட்டம் இருந்தது. அங்கு சென்று ஒரு ஓரமாய் உட்கார்ந்த அவன், சற்றுத் தொலைவில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றிருந்த எத்தனைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனான்.</div>
<div style="text-align: justify;">
<br />இந்த எத்தனும் கூட நம்மைப் போலவே இந்த வீட்டில் திருட வந்துள்ளான் என்பதைப் புரிந்துகொண்ட கொமுரு, அவன் எப்படி இங்கிருப்பவர்களை ஏமாற்றித் திருடப் போகிறான் என்று தான் பார்ப்போமே என்று, கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.</div>
<div style="text-align: justify;">
<br />வீட்டின் உள்ளே உள்ள ஒரு இருட்டறையில், ஒரு பெரிய கட்டிலின் மீது, வணிகரின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. அந்த அறைக்குள், மினுக் மினுக்கென்று ஒரு விளக்கு மட்டும் வெளிச்சம் காட்டிக்கொண்டு இருந்தது. வணிகர் கிடத்தப்பட்டிருந்த கட்டிலுக்குக் கீழே ஒரு பெரிய மரப்பெட்டி கேட்பாரற்றுக் கிடந்தது.</div>
<div style="text-align: justify;">
<br />கூட்டத்தோடு கூட்டமாய் நின்றிருந்த எத்தன் இப்போது, மெல்ல அந்தக் கட்டிலின் ஓரமாகச் சென்று, தான் கொண்டு வந்த மாலையை, வணிகர் மீது போட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br />பிறகு, தன்னை யாராவது பார்க்கின்றனரா என்று சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துக் கொண்டான். யாரும் பார்க்கவில்லை என்று தெரிந்து கொண்டதும், கட்டிலுக்குக் கீழே உள்ள மரப்பெட்டிக்குள் பொசுக்கென்று புகுந்து கொண்டு விட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br />எத்தனின் இந்தச் செய்கைகளை எல்லாம், சற்று தொலைவில் இருந்தவாறு வைத்த கண் வாங்காமல் கொமுரு பார்த்துக் கொண்டிருந்தான். இறந்து போய்க் கட்டிலில் கிடந்த வணிகர், இப்போது திடீரெனப் பேசத் தொடங்கினார். அங்கிருந்த எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யம்.</div>
<div style="text-align: justify;">
<br />வணிகரா பேசுகிறார்! வணிகரைப் போல் குரலை மாற்றி, அந்தக் கட்டிலின் கீழே கிடந்த மரப்பெட்டிக்குள் புகுந்திருந்த எத்தனல்லவா இப்படிப் பேசுகிறான். வணிகர் பேசத் தொடங்கியதும், அந்த வீட்டின் அழுகுரல்கள் அனைத்தும் இப்போது ஓய்ந்து போயின.</div>
<div style="text-align: justify;">
<br />ஆம்... போன உயிரல்லவா மீண்டும் திரும்பி வந்திருக்கிறது. வணிகர், அவர் மனைவியை மட்டும் அருகே வரும்படி கூப்பிட்டார். அவளும், கட்டிலின் ஓரமாய் வந்து நின்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br />""நான் இறந்து போய்விட்டதென்னவோ உண்மை தான். ஆனால், சிறிது நேரம் மட்டும் எமதூதர்கள், என் உயிரைச் சற்று விட்டுப் பிடித்து இருக்கின்றனர். நான், போன மாதம் பக்கத்து ஊரு பங்காரு நாயுடுவிடம், ஐநூறு வெள்ளிப் பணத்தைக் கடனாக வாங்கியிருந்தேன். அதைத் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்!'' என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br />இப்படி வணிகர் கூறியதும், ""ஆமாம்! சாகும்போது கடனோடு சாகக்கூடாது,'' என்றனர் அந்தக் கட்டிலைச் சுற்றி நின்ற கூட்டத்தினர்.</div>
<div style="text-align: justify;">
<br />"அது சரி வணிகரே... நீங்க சொன்ன அந்தப் பங்காரு நாயுடுவை, நாங்கள் எப்படி அடையாளம் கண்டு கொள்வது?'' என்று, அங்கிருந்தவர்களில், விஷயம் தெரிந்து ஒருவர் தான் இப்படிக் கேட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br />""இப்போது நண்பகல் ஆகிறதல்லவா... இன்று மாலை ஆறு மணிக்கெல்லாம் இங்கே, வெள்ளை வேட்டி, சிவப்புச் சட்டை, நீலத்துண்டு அணிந்து, கையில் வெற்றிலை டப்பாவுடன் ஒருவர் வருவார். நெற்றியில் பெரிய நாமம் கூடப் போட்டிருப்பார். அவர் தான் பங்காரு நாயுடு!'' என்று முடித்தார், கட்டிலில் பிணமாய்க் கிடந்த வணிகர்.</div>
<div style="text-align: justify;">
<br />""சரிங்க... அவரிடமே கொடுத்துடறேன்,'' என்று தலையாட்டினாள் வணிகரின் மனைவி.</div>
<div style="text-align: justify;">
<br />அதற்குப் பிறகு வணிகருக்குப் பேச்சுமில்லை; மூச்சுமில்லை.</div>
<div style="text-align: justify;">
<br />கட்டிலுக்குக் கீழே உள்ள அந்த மரப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்டு எத்தன் நடத்தும் இந்த நாடகத்தை, சற்று தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கொமுரு, அந்தத் திருக்கடையூர் எத்தனின் சாமர்த்தியத்தை எண்ணி மிகவும் வியந்து போனான்.</div>
<div style="text-align: justify;">
<br />கட்டிலுக்குக் கீழே இருக்கும் இந்த எத்தன், இனி யாரும் அறியாதபடி முதலில் வெளியே வந்தாக வேண்டும். பின்னரே, பங்காரு நாயுடு போல வேஷம் போட்டு ஏமாற்ற முடியும். ஏன், நாமே இந்த வேஷத்தைப் போட்டு, இங்கிருப்பவர்களை ஏமாற்றி, இந்த ஐநூறு வெள்ளிப் பணத்தையும் அப்படியே அடித்துக்கொண்டு போகக்கூடாது. இப்படி யோசிக்கலானான் கொமுரு. அவ்வளவுதான்... உடனே புறப்பட்டான் அந்த எண்ணத்தைச் செயலாக்க.</div>
<div style="text-align: justify;">
<br />ஒரு துணிக்கடைக்குச் சென்று, வெள்ளைவேட்டி, சிவப்புச்சட்டை, நீலத்துண்டு போன்றவற்றை வாங்கி அணிந்து கொண்டான். நெற்றியில் பெரிய நாமமும், கையில் வெற்றிலை டப்பாவுடனும், வணிகர் வீடு போய்ச் சேர்ந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br />பங்காரு நாயுடுவைப் பார்த்ததுமே, மறுபேச்சின்றி, ஐநூறு வெள்ளிப் பணத்தை அப்படியே மூட்டையாகக் கட்டிக் கொடுத்தாள் வணிகரின் மனைவி.</div>
<div style="text-align: justify;">
<br />அதை வாங்கிக்கொண்ட கொமுரு, அங்கிருந்து உடனே புறப்படத் தொடங்கினான் வேக வேகமாக. அவன் புறப்படத் தொடங்கிய அந்தச் சமயத்தில் தான், கட்டிலுக்குக் கீழே ஒளிந்திருந்த எத்தன், மெல்ல வெளியே வந்தான். அப்படி வெளியே வந்தவன், தான் தெரிவித்த அதே பங்காரு நாயுடு மாதிரியான தோற்றத்தோடு கூடிய ஒருவன் இப்போது மெல்ல நழுவிக்கொண்டு இருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனான்.</div>
<div style="text-align: justify;">
<br />நம்முடைய திட்டத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டு விட்ட எவனோ ஒருவன் தான், இப்படி இங்கிருப்பவர்களையெல்லாம் ஏமாற்றிப் பண மூட்டையோடு நழுவிக்கொண்டிருக்கிறான் எனச் சட்டென உணர்ந்தான் எத்தன். அவ்வளவுதான், பண மூட்டையோடு நழுவும் அவனை விரட்டிப் பிடிப்பதென முடிவு செய்தான்.</div>
<div style="text-align: justify;">
<br />அடுத்த நொடியே, முடிவு செயலானது.</div>
<div style="text-align: justify;">
<br />""ஏய், ஏய்...'' என்று கத்திக்கொண்டு எத்தன், கொமுருவின் பின்னால் ஓடத் தொடங்கினான். இந்தச் சத்தத்தைக் கேட்ட பிறகு தான், சட்டென்று திரும்பிப் பார்த்தான், பண மூட்டையோடு நழுவிக் கொண்டிருந்தான் எத்தன்.</div>
<div style="text-align: justify;">
<br />அவ்வளவுதான்! அப்படியே அதிர்ச்சி அடைந்து, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, தலைதெறிக்க ஓடத் தொடங்கினான் கொமுரு. இப்போது, எத்தன் விடுவதாகவும் தெரியவில்லை, எத்தன் நிற்பதாகவும் தெரியவில்லை. இருவரும் ஓடிக்கொண்டே இருந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br />இப்படி இருவரும் ஓடிக்கொண்டே இருக்கும்போது, ஊருக்கு வெளியே சற்று தூரத்தில், வைக்கோல் போர்கள் இருந்தன. "இந்த வைக்கோல் போருக்குள் நுழைந்துகொண்டு விட்டால், யாராலும் கண்டுபிடிக்க முடியாது' என்று நினைத்த கொமுரு, மறுகணமே, வைக்கோல் போருக்குள் புகுந்து மறைந்துவிட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br />கொமுரு விரட்டியபடி, அந்தக் களத்துமேட்டிற்கு வந்து சேர்ந்த எத்தன், பணமூட்டையை எடுத்து கொண்டு ஓடி வந்தவன், திடீரெனக் காணாமல் போனது பற்றிக் கவலைப்படலானான். எப்படியும், இந்த வைக்கோல் போர்களில் தான் அவன் ஒளிந்திருக்க வேண்டும் என்று, கடைசியில் ஒரு முடிவுக்கும் வந்த எத்தன், அவனை எப்படிக் கண்டுபிடிப்பதென்று யோசிக்கலானான்.</div>
<div style="text-align: justify;">
<br />எத்தன் இப்படி யோசித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக, ஆட்டுக் கிடாய்களை ஓட்டிக்கொண்டு ஓர் இடையன் வந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br />அவனிடம், ""ஆட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் சலங்கையில், ஐந்து மணிகளை மட்டும் இரவல் தர முடியுமா?'' என்று கேட்டான் எத்தன்.</div>
<div style="text-align: justify;">
<br />இடையன் கொடுத்த சலங்கை மணிகளைக் கயிற்றில் கோத்து, தன் கழுத்தில் கட்டிக் கொண்டான் எத்தன். பின், அந்த களத்துமேட்டிலிருந்த ஒவ்வொரு வைக்கோல் போரின் மேலும், மாடு உராய்வது போல உராயத் தொடங்கினான்.<br />அப்படி அவன் உராயத் தொடங்கியபோது, சலங்கை மணிகள் அவ்வப்போது ஓசையை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.</div>
<div style="text-align: justify;">
<br />இப்படி ஒவ்வொரு போராகச் சென்று எத்தன் உராய்ந்து கொண்டு வரும் போது, கொமுரு ஒளிந்திருந்த அந்த வைக்கோல் போரும் வந்தது. தான் ஒளிந்திருக்கும் அந்த வைக்கோல் போரில் வந்து உராய்வது ஒரு மாடு தான் என்று நினைத்த கொமுரு, ""சே, சே... இந்த சனியன்பிடித்த மாடு, ஏன் தான் இப்படி வந்து உராய்கிறதோ தெரியவில்லையே!'' என்று கூறினான் போருக்குள் இருந்தபடியே.</div>
<div style="text-align: justify;">
<br />அவ்வளவுதான்... பண மூட்டையோடு வந்தவன், இந்த போருக்குள் தான் இருக்கிறான் என்று புரிந்துகொண்ட எத்தன், ""எழுந்து வாடா வெளியே!'' என்று அதட்டினான்.</div>
<div style="text-align: justify;">
<br />ஒளிந்திருந்த இடம் தெரிந்துவிட்டதால், வேறு வழியின்றி வெளியே வந்தான் கொமுரு. ""அடடே... நீ தானா!'' என்று வியந்தான் கொமுருவைப் பற்றி முன்பே தெரிந்து வைத்திருந்த எத்தன்.</div>
<div style="text-align: justify;">
<br />""ஆமாம்... நானேதான்!'' என்றான், அசட்டுத் சிரிப்புடன் கொமுரு.<br />பிறகென்ன, வணிகரின் ஐநூறு பணமும், ஆளுக்குப் பாதியான</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றி சிறுவர்மலர்</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-23853984.post-48215985595572731312015-10-12T10:55:00.001+05:302015-10-12T10:55:08.261+05:30மாட்டிக்கிட்டியா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSSfRJeENEvfGbp27uYjkFqKAVbR3v_CAAzkj79iEi9bU1CEw5SfR62hlytbLsD10ynYiRe3GPFgJuhfbhey8znQoWMQYP6Kk5_pYLYZ2hJDg19fwaSZXC32dm_aOhyphenhyphenZZQ8Jhi/s1600/nathaswaram+tamil+kids+story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSSfRJeENEvfGbp27uYjkFqKAVbR3v_CAAzkj79iEi9bU1CEw5SfR62hlytbLsD10ynYiRe3GPFgJuhfbhey8znQoWMQYP6Kk5_pYLYZ2hJDg19fwaSZXC32dm_aOhyphenhyphenZZQ8Jhi/s1600/nathaswaram+tamil+kids+story.jpeg" /></a></div>
<div style="text-align: justify;">
ஒரு நாதஸ்வரக்காரனும், ஒரு பெட்ரோமாக்ஸ்காரனும் நண்பர்களாக இருந்தனர். இருவரும் சில விழாக்களில் சேர்ந்து போவர்; சேர்ந்து வருவர். பெட்ரோமாக்ஸ் விளக்கால் இரவைப் பகலாக்குவான் ஒருவன். மற்றொருவன் நாதஸ்வரத்தால் விழாவை நாதவெள்ளத்தில் மிதக்க வைப்பான்.</div>
<div style="text-align: justify;">
<br />ஒருநாள் இருவருக்கும் சண்டை வந்தது; ஒருவரை ஒருவர் திட்டித் தீர்த்துக் கொண்டனர். எனவே, எந்தவொரு விழாவுக்கும் இருவரும் சேர்ந்து இணைந்து செல்வதில்லை. ஒருவன் முன்னாலும், மற்றவன் பின்னாலும் செல்வர்.</div>
<div style="text-align: justify;">
<br />ஒரு விழாவில் பெட்ரோமாக்ஸ் காரன் முந்திக் கொண்டான். விழாக்குழுவினர், ""நாதஸ்வரக்காரன் எங்கே?'' என்று கேட்டனர்.</div>
<div style="text-align: justify;">
<br />அவர்களிடம், ""அதை ஏன் கேட்கிறீங்க? அவன் ஒரு விழாவுக்கு ஊதி விட்டு வெத்துக் குழலோடு வருவான். வேணுமுன்னா குழலை வாங்கிப் பாருங்க தெரியும்!'' என்று தூண்டிவிட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br />விழாக் கமிட்டியார் சோணங்கிகள்; விவரம் இல்லாதவர்கள். நேரம் ஆகிக் கொண்டேபோனது. அவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. நாதஸ்வரக்காரன் வரட்டும் என்று காத்திருந்தனர். கடைசியில் நாதஸ்வரக்காரன் வந்தான். அவனிடம் அவர்கள் ஊதுகுழலை வாங்கிப் பார்த்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br />உள்ளே ஒன்றும் இல்லாமல் இருந்தது. விரலை விட்டு நன்றாகத் தடவிப் பார்த்தனர். உள்ளே ஒன்றும் இல்லை. அவர்களின் கோபம் அதிகரித்தது. நாதஸ்வரக்காரனை நன்றாக உதைத்துவிட்டனர். எல்லாரும் சேர்ந்து செம்மையாக மொத்து மொத்து என்று மொத்தினர்.</div>
<div style="text-align: justify;">
<br />பாவம் நாதஸ்வரக்காரன். "என்ன ஏதென்று எதுவும் கேட்காமல் இப்படிப்போட்டு உதைக்கிறார்களே...' என்று அழுதான். இறுதியில் புரியவைத்தான் ஒருவன்.</div>
<div style="text-align: justify;">
<br />""ஏண்டா! எங்கேயோ போய் ஊதிட்டு இங்க வெத்துக் குழலைக் கொண்டு வாற!'' என்ற ஏசினான்.</div>
<div style="text-align: justify;">
<br />பெட்ரோமாக்ஸ்காரன் இவனைப்பார்த்துக் கள்ளமாகச் சிரித்தான். நாதஸ்வரக்காரனுக்கு பிறகுதான் புரிந்தது. இது பெட்ரோமாக்ஸ்காரன் வேலையென்று. மனசுக்குள் கறுவிக் கொண்டான், "இரு இரு உன்னை ஒருநாள் பழிவாங்கி விடுகிறேன்...' என்று.</div>
<div style="text-align: justify;">
<br />ஒருநாள் பழிவாங்கும் சந்தர்ப்பம் வந்தது. ஒரு விழாவில் இருவரும் ஏற்பாடாகி இருந்தனர். அந்த விழாவிற்கு பெட்ரோமாக்ஸ்காரன் பிந்தி வந்தான். ஊது குழல்காரன் முந்திக் கொண்டான். அவ்விழாக் கமிட்டியர் பெட்ரோமாக்ஸ்காரனைப் பற்றி விமர்சித்தனர். நாதஸ்வரக்காரனுக்கு மகிழ்ச்சி.</div>
<div style="text-align: justify;">
<br />பழிவாங்கும் ஆசையால், ""அதுவா அது ஏங்கேக்கிறீங்க? அவன் ஒரு ஏமாத்துக்காரன். அவன் பக்கத்தூரு விழாவுக்கு எல்லாத்தையும் எரிச்சுட்டு, வெத்து விளக்கை கொண்டு வருவான். வேணுமானா வந்ததும் பத்த வைக்கச் சொல்லுங்க அது புஸ்புஸ்ங்கும்!'' என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br />சிறிதுநேரஞ் சென்று பெட்ரோமாக்ஸ்காரன் வந்தான். விளக்கை பற்ற வைத்தான். புஸ்புஸ் என்றது. விழாக்கமிட்டியாருக்கு அவன் பிந்தி வந்ததால் வேறு கோபம் வந்தது. விளக்குக்காரனைப் பிடித்து நன்றாக உதைத்தனர். இவன் விஷயம் புரியாமல் விழித்தான். அடி பொறுக்காமல் அழுதான்.</div>
<div style="text-align: justify;">
<br />""எங்கேயோ கொண்டு போயி விளக்க எரிச்சுட்டு வெத்து விளக்கையா கொண்டு வார... ஏண்டா புஸ் புஸ்ங்குது?'' என்று மீண்டும் உதைத்தனர். நாதஸ்வரக்காரனின் நமட்டுச் சிரிப்பைக் கண்டதும் </div>
<div style="text-align: justify;">
பெட்ரோமாக்ஸ்காரனுக்கு விஷயம் புரிந்தது. தலையைக் குனிந்து கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றி தினமலர் சிறுவர்மலர்</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-23853984.post-54649665402555936332015-10-08T12:35:00.003+05:302015-10-08T12:35:56.693+05:30குறை - சிறுவர் கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAonlEFVjYEx_vtsFmgbJV01hBZsNdo1sGORlCyfKSl1FFefrJMtgS9EXhyphenhyphenOhhnDkCTA2X_DEArjp5jcnvm1U44yRlST9mxre9-EhRALffxrCWSM86NNenyg3JhUIA3iYD5br_/s1600/draw+back+tamil+kids+story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAonlEFVjYEx_vtsFmgbJV01hBZsNdo1sGORlCyfKSl1FFefrJMtgS9EXhyphenhyphenOhhnDkCTA2X_DEArjp5jcnvm1U44yRlST9mxre9-EhRALffxrCWSM86NNenyg3JhUIA3iYD5br_/s1600/draw+back+tamil+kids+story.jpeg" /></a></div>
<div style="text-align: justify;">
தெத்துப்பட்டி என்ற ஊரில் சாந்தனு என்ற இளைஞன் இருந்தான். அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியை நகரத்திற்கு அழைத்து வந்து அவளுடன் குடும்பம் நடத்தினான்.</div>
<div style="text-align: justify;">
<br />முதல்நாள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினான். ""இங்கே யாருமே சரி இல்லை. எல்லாரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். யாரும் என்னுடன் பேசுவது இல்லை!'' என்று குறை சொன்னாள்.</div>
<div style="text-align: justify;">
<br />""நீ இப்போதுதான் இங்கே வந்திருக்கிறாய். உன்னுடன் பழக அவர்கள் தயக்கம் காட்டியிருக்கலாம். நீ அதைத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பாய். நாளாக நாளாக எல்லாம் சரியாகி விடும். சிறிது பொறுமையாக இரு!'' என்றான் அவன்.<br />அடுத்த நாள் அவன் வேலை முடித்து வீடு திரும்பினான். ""அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் நம்மைக் குறை சொல்லிக் கொண்டிருந்தனர். நான் வருவதைப் பார்த்ததும் பேசுவதை நிறுத்தி விட்டனர். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை!'' என்றாள் அவள்.</div>
<div style="text-align: justify;">
<br />இப்படியே அவள் நாள்தோறும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைப் பற்றி குறை சொன்னாள். ""இனி நம்மால் இங்கே குடி இருக்க முடியாது. வேறு இடம் பாருங்கள்,'' என்று நச்சரிக்கத் தொடங்கினாள். "நாம் அதிகம் பழகாததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் குறை தெரியாமல் போயிற்றா? மனைவி சொல்வது போல அவர்கள் பொல்லாதவர்கள்தானா?' என்று குழம்பினான் அவன்.</div>
<div style="text-align: justify;">
<br />அப்போது பெற்றோர்களிடம் இருந்து அவனுக்கு ஒரு மடல் வந்தது. அதில், "ஊர்த் திருவிழா ஒருவாரம் நிகழ உள்ளது. நீ குடும்பத்துடன் வர வேண்டும்' என்று எழுதி இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br />மனைவியிடம் அந்த மடலைக் காட்டினான். ""என் பெற்றோர்கள் ஊர்த் திருவிழாவிற்கு நம்மை அழைத்திருக்கின்றனர். எனக்கு அலுவலகத்தில் நிறைய வேலை உள்ளது. என்னால் வர முடியாது. நீ மட்டும் சென்று திருவிழா முடியும் வரை இருந்துவிட்டு வா!'' என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br />அவளும் அவன் சொன்னது போலவே ஊருக்குச் சென்றாள். அங்கே ஒருவாரம் தங்கிவிட்டு வந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br />""பயணம் எப்படி இருந்தது? என் வீட்டில் உள்ளவர்கள் உன்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்களா?'' என்று கேட்டான் அவன்.</div>
<div style="text-align: justify;">
<br />""அங்கே மாடு மேய்க்கும் சுப்பனே என்னை எதிரியைப் போலப் பார்த்தான். மற்றவர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? இனி என்னை அங்கே போகச் சொல்லாதீர்கள்!'' என்று சலித்துக் கொண்டாள் அவள். "சுப்பன் மாடுகளை மேய்ப்பதற்காக அதிகாலையில் வீட்டைவிட்டுச் செல்வான். இரவில்தான் வீடு திரும்புவான். பகலில் அவனை பார்ப்பதே அரிது. இரவிலும் எப்போதாவதுதான் கண்ணில் படுவான். அவன் இவளை எதிரி போலப் பார்த்ததாகச் சொல்கிறாள்.</div>
<div style="text-align: justify;">
<br />"யாரைக் கண்டாலும் அவர்கள் தன்னை பார்ப்பதாகவும், தன்னைப் பற்றிதான் பேசுவதாகவும் நினைப்பதுடன், அடுத்தவர்களை குறை கூறும் இயல்பு இவளுக்கு அதிகம் உண்டு. நல்ல வேளை, இவள் பேச்சை நம்பி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சண்டை போடாமல் இருந்தேனே. இந்தக் கெட்ட பழக்கத்தை இவள் விடும்படி செய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்!' என்ற முடிவுக்கு வந்தான் சாந்தனு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றி தினமலர் சிறுவர் மலர்</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-23853984.post-11313973206196583822015-10-05T12:28:00.001+05:302015-10-05T12:28:16.837+05:30எல்லாருமே கெட்டவர்கள்தான் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRVq7EowT-iosXOVcX5RbQsUuamC1JQ_H0gJNn85eHxyuCdYE9AAJlMz0hIT3fQJ9i89z56b9n79QS6RsgQ1Pmwg8NtPspTYNE1tEFXN00QpIRNo2Yvkg3Xxn8KPHeJMyrIeS8/s1600/all+are+bad+tamil+story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="315" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRVq7EowT-iosXOVcX5RbQsUuamC1JQ_H0gJNn85eHxyuCdYE9AAJlMz0hIT3fQJ9i89z56b9n79QS6RsgQ1Pmwg8NtPspTYNE1tEFXN00QpIRNo2Yvkg3Xxn8KPHeJMyrIeS8/s320/all+are+bad+tamil+story.jpeg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
முன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர் எனலாம்.</div>
<div style="text-align: justify;">
<br />அந்த மாணவர்களில் சிலர், பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள். மற்றவர்களைவிட எளிதில் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். அவர்களுடைய நற்பண்புகள் காரணமாக மற்ற மாணவர்களால் அவர்கள் மதிக்கப்பட்டனர். ஆனால், அறிவுக் கூர்மையற்ற சிலர் மட்டும், அந்த நல்ல மாணவர்களிடம் பொறாமை கொண்டிருந்தனர். குருவின் உபதேசங்களைக் கிரகித்துக் கொள்ளும் திறன் தங்களிடம் குறைவாயிருப்பதை அவர்கள் மறந்துவிட்டனர்.</div>
<div style="text-align: justify;">
<br />ஏனோ குருவின் பாரபட்சமற்ற தன்மையில் அவர்களுக்குச் சந்தேகம். அவர் பக்தியுணர்வுடைய மாணவர்களுக்கு மட்டும் ரகசியமாக விசேஷ அறிவைப் புகட்டுவதாக எண்ணிக் கொண்டனர்.</div>
<div style="text-align: justify;">
<br />ஒருநாள் குருதேவர் தனித்திருந்த போது அவரிடம் சென்று, ""ஐயனே! தாங்கள் பாடம் கற்பிப்பதில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்று சந்தேகப்படுகிறோம். தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டும் உங்கள் ஞானத்தின் முழுப்பலனையும் நீங்கள் வழங்குவதாய் கருதுகிறோம். ஏன் எங்களுக்கும் அந்தச் சலுகையை விரிவுபடுத்தக் கூடாது?''என்று கேட்டனர்.</div>
<div style="text-align: justify;">
<br />குருதேவர் அந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தார். ஆனாலும், அமைதியாகப் பதிலளித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br />""நான் உங்கள் அனைவரையும் ஒரே மாதிரிதான் மதித்து நடத்துகிறேன். யாருக்கும் தனிப்பட்ட முறையில் சலுகை காட்டவில்லை. உங்களில் சிலர் விரைவாக முன்னேறியிருந்தால், நான் சொல்கிறவற்றை அவர்கள் ஊன்றிக் கவனித்திருக்க வேண்டும். நீங்களும் அவ்வாறு முயன்று கற்பதை யார் தடுத்தது?'' என்று கேட்டார் அவர்.</div>
<div style="text-align: justify;">
<br />ஆனால், மாணவர்கள் அவருடைய பதிலில் திருப்தியடையவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்த குரு, ""ரொம்ப சரி! குறைப்பட்டுக் கொள்கிறவர்கள் மீது நான் விசேஷ கவனம் செலுத்துகிறேன். ஆனால், ஒரு நிபந்தனையின் பேரில்தான். ஒரு சின்ன பரீட்சை வைப்பேன். அதில் நீங்கள் தேறியாக வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br />""பரீட்சை இதுதான். நீங்கள் அடிக்கடி போய்வருகிற பக்கத்து கிராமத்துக்குப் போக வேண்டும். அங்கிருந்து மிகவும் தகுதியான, எல்லாவிதத்திலும் நிறைவான ஒருவரை நீங்கள் அழைத்து வர வேண்டும் அவ்வளவுதான்,'' என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br />பரீட்சை ரொம்பவும் எளிதாக இருப்பதாக அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதில் தேறிவிட்டால், குருவின் விசேஷ கவனம் தங்கள் பக்கம் திரும்பி விடுமே. அவர்கள், தங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, பக்கத்து ஊருக்கு அனுப்பினர், தகுதியான ஒரு நபரைக் கண்டுபிடித்து அழைத்து வருவதற்கு. ஆனால், அவனுடைய துரதிர்ஷ்டம், நல்லதன்மை உள்ள ஒருவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு குற்றம் குறை இருக்கவே செய்தது.</div>
<div style="text-align: justify;">
<br />அவன் நீண்ட நாட்கள் முயன்றும் பலனில்லாமல் போயிற்று. குருவிடம் வந்து, ""ஐயனே! நான் தங்களிடம் இப்படிச் சொல்வதற்காக வருந்துகிறேன். அந்த ஊர் முழுக்க தேடிப் பார்த்துவிட்டேன். ஒரு நல்ல மனிதன் கூட கிடைக்கவில்லை. ஒவ்வொருவரும் ஏதாவதொரு தவறைச் செய்தவர்களாகவே இருக்கின்றனர். எல்லாரும் கெட்டவர்கள்!'' என்றான் அவன்.</div>
<div style="text-align: justify;">
<br />""அட! அப்படியா? இங்கே யார் மீது நீங்கள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்களுடைய அணியில் இருந்து யாரேனும் ஒருவரை அங்கே அனுப்புவோம்,'' என்றார் குருதேவர்.</div>
<div style="text-align: justify;">
<br />பிறகு, அந்த பக்தியும், கடமையுணர்வும் கொண்ட மாணவர்களில் ஒருவனை அழைத்து, ""நீ பக்கத்து ஊருக்குச் சென்று ரொம்பவும் கெட்டவரான ஒருவரை அழைத்து வா!'' என்றார் அவர்.</div>
<div style="text-align: justify;">
<br />குருவின் கட்டளையை ஏற்று, அந்த அணியில் இருந்து ஒருவன் அடுத்த ஊருக்குச் சென்றான். சில நாளில் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தான். ""ஐயனே! என் பதில் உங்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கலாம். நான் அந்த ஊர் முழுக்க ஆராய்ந்து விட்டேன்; ஒரேயொரு கெட்டவனைக் கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை!'' என்றான் அவன்.</div>
<div style="text-align: justify;">
<br />அவனுடைய கருத்துரை கேட்டு, குறை கூறும் அணியைச் சேர்ந்தவர், உரத்த குரலில் சிரித்து ஆரவாரம் செய்தனர். ஆனால், அந்த மாணவன் தொடர்ந்து பேசினான், ""எல்லாரும் ஏதாவதொரு நற்காரியம் செய்தவர்களாகவே இருக்கின்றனர். ஒரு நற்செயலும் செய்யாத ஒருவனை என்னால் காண முடியவில்லை,'' என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br />""நல்லது, கெட்டது; சரி, தவறு என்பதெல்லாம் இதில் இருந்து தான் தொடங்குகிறது. எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு நல்லதைக் காண்கிறபோது உங்களுடைய ஞானம் மலர்கிறது. எல்லாவற்றிலும் குற்றம் காண்கிறபோது அந்த ஞானம் உதிர்த்து விடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br />""உலகம் மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்த கலவையாக இருக்கிறது. அதில் இருந்து நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததே ஞானம். நேர்மறை மனோபாவம் உள்ளவர்கள் விரைந்து முன்னேறுகின்றனர். ஆனால், எதிர்மறை மனோபாவம் உள்ளவர்களால் மெதுவாகத்தான் வளர்ச்சிக் காண முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br />""குருவைப் பொறுத்தவரை, எல்லாருமே அவருக்குப் பிரியமானவர்கள் தான். ஒரு மாணவன் விலகியிருப்பதாய் உணர்ந்தால் அது அவனுடைய தவறு. நீங்கள் எந்த அளவு என்னோடு ஒன்றாயிருப்பதாக உணர்கிறீர்களோ, அந்த அளவு உங்கள் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br />""குருவிடமாகட்டும், கடவுளிடமாகட்டும், முழுமையாய் சரணடைந்து விட வேண்டும். அரைகுறையாய் சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை!'' என்றார் குரு.</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-23853984.post-7676484059106787472015-09-29T12:10:00.000+05:302015-09-29T12:10:01.268+05:30குடுமி ஆட்டம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-9P8GoZOk1hyphenhyphenpOjvwGx7XLScSr5trj2QzFriGm34LhL9Mx-sQmU9uEcD5tqVcaOgzq42vTAZ6nwSAp8FhN7AU79oba2VF-R7l6Je5blMpafmc9PHTRnMsTtDx23U1Q7Ng0Qm_/s1600/tamil+story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-9P8GoZOk1hyphenhyphenpOjvwGx7XLScSr5trj2QzFriGm34LhL9Mx-sQmU9uEcD5tqVcaOgzq42vTAZ6nwSAp8FhN7AU79oba2VF-R7l6Je5blMpafmc9PHTRnMsTtDx23U1Q7Ng0Qm_/s1600/tamil+story.jpeg" /></a></div>
<div style="text-align: justify;">
ஒரு ஊரில் ஒரு பண்ணையார் இருந்தார். அவருக்குச் சொத்துக்கள் ஏராளமாக இருந்தன.</div>
<div style="text-align: justify;">
<br />பண்ணையாருக்கு ஒரே ஒரு பெண்தான்! ஆனால், அந்தப் பெண் ஆணைப் போலவே வளர்ந்தாள். கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றாள். மேலும், கலை, இலக்கியம், இசை ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br />பெண்ணுக்கு தகுந்த மாப்பிள்ளை தேட முயற்சி எடுத்தார் பண்ணையார். வரக்கூடிய மாப்பிள்ளை தன் வீட்டோடு இருக்கக் கூடியவனாகப் பார்த்தார்.</div>
<div style="text-align: justify;">
<br />பல மாதங்களாக பல ஊர்களில் பார்த்தும், எதுவும் பொருத்தமாக அமையவில்லை. எவருமே மாமனார் வீட்டில் தங்கும் மாப்பிள்ளையாக வர விரும்பவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br />பக்கத்து ஊரில் பையன் ஒருவன் இருந்தான். அவனுக்கு தாய், தகப்பன் இல்லை. கல்லூரியில் படிக்க வசதி இல்லை. சிற்றப்பன் வீட்டில் தங்கி இருந்தான். அவன் வேலை தேடியும், விண்ணப்பம் போட்டுக் கொண்டும் இருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br />பண்ணையார் அவனைப் பற்றி விசாரித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br />"அவன் ஏழையாக இருந்தாலும், பரவாயில்லை. அவனையே ஏற்பாடு செய்து, பெண்ணை திருமணம் செய்து கொடுத்து, அவனை வீட்டோடு வைத்துக் கொள்ளலாம்' என்று சிலர் கூறினர்.</div>
<div style="text-align: justify;">
<br />அந்த ஏழை இளைஞனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்து வைத்தார் பண்ணையார். அந்த இளைஞனும் மாமனார் வீட்டில் மனைவி சொல்வதைக் கேட்டுக் கொண்டு, அமைதியாக இருந்து வந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br />பண்ணையார் காசிக்கு யாத்திரை சென்றார்.</div>
<div style="text-align: justify;">
<br />ஒருநாள், பாடகர் ஒருவர், தம் குழுவினருடன் பண்ணையார் வீட்டுக்கு வந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br />""ஊர்தோறும், செல்வந்தர் வீடுகளில் பாடுவது வழக்கம்,'' என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br />""பண்ணையார் யாத்திரை சென்றுள்ளார். எனக்கு இசையில் விருப்பம் இல்லை. நீங்கள் பண்ணையார் வந்த பிறகு வரலாம்,'' என்றார் மாப்பிள்ளை.<br />பாடகர் வருத்தத்தோடு புறப்படத் தயாரானார்.</div>
<div style="text-align: justify;">
<br />அப்போது, குளித்து விட்டு வந்த பண்ணையார் மகள், ""வந்தவர் யார் எதற்காக வந்தார்கள்?'' என்று கேட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br />""பாடகர், பாடினால் சன்மானம் பெறலாம் என்று வந்துள்ளார். பண்ணையார் யாத்திரை போயிருக்கிறார். அவர் வந்த பிறகு வரலாம் என்று கூறி அனுப்பினேன்,'' என்றான் மாப்பிள்ளை.</div>
<div style="text-align: justify;">
<br />""நம்பிக்கையோடு வந்தவரை வெறுமனே போகச் சொல்வது முறையல்ல, என்று கூறி பாடகரை வரவழைத்து இசை நிகழ்ச்சி நடத்தும்படி ஏற்பாடு செய்தாள் பண்ணையார் மகள்.</div>
<div style="text-align: justify;">
<br />""எனக்கு இசையே தெரியாது. நான் எப்படி சபையில் இருந்து ரசிப்பது?'' என்றான் மாப்பிள்ளை.</div>
<div style="text-align: justify;">
<br />""அதை நான் கவனித்துக் கொள்கிறேன்,'' என்று கூறிவிட்டு அவன் குடுமியில் ஒரு நூலைக் கட்டி, அதை தன்கையில் பிடித்துக் கொண்டு, பின்வரிசையில் அவள் இருந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br />பாடகர் உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்தார். பாட்டுக்கு ஏற்றபடி நூலை ஆட்டிக் கொண்டிருந்தாள் பண்ணையார் மகள்.</div>
<div style="text-align: justify;">
<br />அவ்வவ்போது மாப்பிள்ளையின் தலை அசைந்து ஆடியது.</div>
<div style="text-align: justify;">
<br />"மாப்பிள்ளை நல்ல ரசிகராக இருக்கிறாரே' என்று பாடகர் நினைத்து, மேலும், சிறப்பாகப் பாடிக் கொண்டிருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br />திடீரென்று பாடகரைப் பார்த்து, ""உம்முடைய பாட்டை நிறுத்தும்!'' என்றார் மாப்பிள்ளை.</div>
<div style="text-align: justify;">
<br />பாடகர் திடுக்கிட்டார். பாட்டில் ராகத்தில் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டதோ என்று குழப்பத்தில் ஆழ்ந்து பாட்டை நிறுத்தி விட்டு, மாப்பிள்ளைப் பார்த்தார்.</div>
<div style="text-align: justify;">
<br />""என் குடுமியில் கட்டியிருந்த நூல் அறுந்து விட்டது!'' என்றார் மாப்பிள்ளை.<br />பாடகர் உட்பட அனைவருக்கும் சிரிப்புத் தாங்க முடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br />அதன்பிறகு ஒரு பாடகரைக் கொண்டு மாப்பிள்ளைக்கு இசைப்பயிற்சி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br />ஏழையாக இருப்பது குற்றம் இல்லை; ஆனால், முட்டாளாக இருக்கக் கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றி சிறுவர்மலர்</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-23853984.post-37364025871855660962015-09-28T12:52:00.002+05:302015-09-28T12:53:48.115+05:30திருடி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2KCAAzLpnedPY_Dm1odfDI5sLeJkLhF0297G6BHC5wS8b-UcOQvSC73uNVXe_R9hVXeudB_7_U_GmuNSEz9qPAf_rabyQCusI5XSWXJnPwERVChDT4La_lYWCXtcpyxOeim5e/s1600/thief_judge_tamil_story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2KCAAzLpnedPY_Dm1odfDI5sLeJkLhF0297G6BHC5wS8b-UcOQvSC73uNVXe_R9hVXeudB_7_U_GmuNSEz9qPAf_rabyQCusI5XSWXJnPwERVChDT4La_lYWCXtcpyxOeim5e/s1600/thief_judge_tamil_story.jpeg" /></a></div>
<div style="text-align: justify;">
அந்தியூர் நீதிபதி வழக்குகளைச் சாமர்த்தியமாக விசாரித்து நியாயம் வழங்குவதில் சமர்த்தர். அன்று அவரிடம் வந்த வழக்கு விசித்திரமாக இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br />
""ஐயா! என் கோழி இவள் வீட்டுக்கு அடிக்கடி போய்விடும். நான் வயல்வேலைக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து பார்க்கும்போது என் கோழியைக் காணவில்லை. கேட்டால் தெரியாதென்கிறாள். அந்தக் கோழி வாங்கின கடனே இன்னும் அடையவில்லை! அதற்குள் நஷ்டப்படும்படி ஆகிவிட்டது. நீங்கதான் நல்லபடி தீர்ப்பு சொல்ல வேண்டும்!'' என்று முறையிட்டாள் ஒருத்தி.</div>
<div style="text-align: justify;">
<br />
""இதற்கு உன் பதிலென்ன?'' என்று மற்றவளைக் கேட்டார் நீதிபதி.</div>
<div style="text-align: justify;">
<br />
""ஐயா! இவள் கோழி என் வீட்டுக்குள் வந்து அடிக்கடி என் கோழிக்கு வைத்திருக்கும் தீவனத்தைத் தின்னும். நானும் விரட்டி இருக்கிறேன். இன்றைக்கு அது வரவில்லை. அதைக் காணவில்லை என்றால் அதற்கு நானா பொறுப்பு!'' என்று கோபமாக பதில் சொன்னாள் அவள்.</div>
<div style="text-align: justify;">
<br />
""சரி. நீங்கள் போகலாம். அம்மணி! சாட்சி இல்லாமல் குற்றம் நிரூபணமாகாது!'' என்று சொல்லி இருவரையும் அனுப்பிவிட்டார் நீதிபதி.</div>
<div style="text-align: justify;">
<br />
கோழித்திருடி திமிராக நடந்துபோனாள். குற்றவாளி அவள்தான் என்று நீதிபதிக்குத் தெரிந்தது. ஆனால், அதை வைத்துத் தீர்ப்பு சொல்ல முடியாதே!<br />
வழியில் ஒரு திண்ணையில் நான்கு பேர் சொக்கட்டான் ஆடிக்கொண்டிந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br />
""இன்றைக்கு மன்றத்தில் கோழியைத் திருடவில்லை என்று சாத்தித்துவிட்டு திமிராக நடக்கிறாள் பார்! அவள் தலையில் ஒட்டியிருக்கும் கோழி இறகை நீதிபதி பார்த்திருந்தால் என்ன ஆயிருக்கும்?'' என்றான் ஒருவன் மெல்லிய குரலில்.</div>
<div style="text-align: justify;">
<br />
கோழி திருடிக்குப் பக்கென்றாகிவிட்டது. மெதுவாகப் பின் தலையைத் தடவுவது போல் தட்டிவிட்டாள். சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த காவலர்களில் இருவர் ஓடிவந்து அவளைப் பிடித்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br />
நீதிபதி தலைப்பாகையை எடுத்துவிட்டு அவள் முன் வந்தார். அவள் வெலவெலத்துப் போய் குற்றத்தை ஒப்புக்கொண்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br />
கோழிக்கான தொகையை அபராதத்தோடு கோழியைப் பறிகொடுத்தவளிடம் கொடுத்து மன்னிக்கும்படி வேண்டினாள்.</div>
<div style="text-align: justify;">
<br />
பொய்யும் திருட்டும் முடிவில் அவமானத்தையே தரும்.<br />
<br />
நன்றி தினமலர் சிறுவர்மலர் </div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-23853984.post-6984520377671018932015-09-26T12:41:00.000+05:302015-09-26T12:41:22.453+05:30அரசன் புறா!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCMQSy1NAVXq5zZ8G5GivYcWGUdtYq_h7h4Kr2NPePpTZjfFS8DcPg0ARBGVm3VW5JtdEOHKIwUxJRLHgmg-hQjDaeTOnfVqMWG5tUDGPdheC0tzDgQ64lsBHhsm_hxr5SENqk/s1600/tamil+puraa+story.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="217" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCMQSy1NAVXq5zZ8G5GivYcWGUdtYq_h7h4Kr2NPePpTZjfFS8DcPg0ARBGVm3VW5JtdEOHKIwUxJRLHgmg-hQjDaeTOnfVqMWG5tUDGPdheC0tzDgQ64lsBHhsm_hxr5SENqk/s320/tamil+puraa+story.jpeg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
வேடன் ஒருவன், ஒரு ஆலமரத்தினடிக்கு வந்தான். வலையை விரித்து, அரிசியைத் தூவி வைத்தான். உடனே, அண்மையிலிருந்த ஒரு புதரில் மறைந்து கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br />பறவைகள் வந்து வலையில் விழுவதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தான். அச்சமயம், புறாக்களுக்கு அரசனான சந்திரன், தன் பரிவாரங்களுடன், இரை தேடிக்கொண்டு அந்தப் பக்கமாக வந்தது. உடனே, அங்கு அரிசி இறைக்கப்பட்டிருந்ததைக் கண்டு கும்பலாய் இறங்கத் தொடங்கியது. ஆனால், அப்புறாக்களின் அரசன் அதைத் தடுத்தது.</div>
<div style="text-align: justify;">
<br />""இந்த காட்டில், தானியம் எப்படி வரும்? நிச்சயம் இதை யாரோ இங்கு கொண்டு வந்து தெளித்திருக்க வேண்டும்! இதுபற்றி நாம் நன்கு தெரிந்து கொண்டாலொழிய, அந்தத் தானியத்தை தின்னக்கூடாது.''</div>
<div style="text-align: justify;">
<br />""ஏனென்றால், ஒரு மனிதன், பொன் காப்புக்கு ஆசைப்பட்டு, எப்படி ஒரு புலியிடம் அகப்பட்டுக்கொண்டு மரணமடைந்தானோ, அதுபோல் இது ஏதோ விபரீதமாகத் தோன்றுகிறது,'' என்றது புறா அரசன்.</div>
<div style="text-align: justify;">
<br />""அது என்ன கதை?'' என்று மற்ற புறாக்கள் கேட்க, புறா அரசன் சொல்லத் தொடங்கியது.</div>
<div style="text-align: justify;">
<br />""நான், முன்பு ஒரு நாள், இரை தேடிக்கொண்டு இக்காட்டின் தெற்கே செல்லுகையில் அதைக் கண்டேன்...</div>
<div style="text-align: justify;">
<br />அது ஒரு கிழப்புலி. மிகவும் வயதாகிவிட்டது. அங்குமிங்கும் ஓடி இரைதேட முடியாத நிலை. அதற்காக வயிறு பசிக்காமல் இருக்குமா? வேளா வேளைக்கு அதற்குப் பதில் சொல்லியாக வேண்டுமே!</div>
<div style="text-align: justify;">
<br />அது, வெகு நாட்களாக, ஒரு ஜதை பொன்காப்பு வைத்திருந்தது. அதை யாருக்காகிலும் கொடுத்துவிட வேண்டும் என்று தீர்மானித்திருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br />ஒருநாள், அக்கிழப்புலி, அங்கிருந்த ஒரு ஏரியில் நீராடிவிட்டு, கையில் காப்பை பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது. அந்தச் சமயம் பார்த்து ஒரு மனிதன், அக்கரைப் பக்கமாக வந்தான். அவனைக் கண்டதும், ""ஓ மனிதா! இதோ இந்தப் பொன் காப்புகளை வாங்கிக்கொண்டு போ!'' என்று இரைந்து சொல்லி, அந்தக் காப்புகளையும் எடுத்துக் காட்டியது.</div>
<div style="text-align: justify;">
<br />அதுகேட்ட மனிதன், சற்று நின்றான்; ஆலோசித்தான். "இதோ, பொன்காப்பு நமக்கு வலிய கிடைக்கிறது! ஆனால், அதைக் கொடுப்பதோ ஒரு புலி! அது துஷ்ட மிருகமாயிற்றே! காப்பை வாங்க அதன் அருகில் சென்றதும், அது நம் மீது பாய்ந்துவிட்டால் என்ன செய்வது! என்ன தர்மசங்கடமான நிலை! அதற்காக, இந்தப் பொன்காப்பை கைவிடுவதற்கும் மனம் வரவில்லையே! என்ன செய்வது.</div>
<div style="text-align: justify;">
<br />"உம் மரணம், இப்போது இல்லாவிட்டாலும் எப்போதோ ஒருநாள் வந்தே தீரப் போகிறது. அதைத் தடுக்க முடியுமா? ஆகையால், எப்படியும் இந்தப் பொன் காப்புகளைப் பற்றிக்கொள்ள வேண்டும்' என்றெல்லாம் யோசித்துத் தீர்மானித்தான் அவன்.</div>
<div style="text-align: justify;">
<br />""ஓ புலியாரே! அது பொன் காப்புகள் தானா? நன்றாய்த் தூக்கிக் காட்டும் பார்ப்போம்.''</div>
<div style="text-align: justify;">
<br />""ஓ! அது வேறு சந்தேகமா உமக்கு! இதோ நன்றாகப் பார்த்துச் சொல் மனிதா!'' என்று நன்றாய்த் தூக்கிக் காட்டியது.</div>
<div style="text-align: justify;">
<br />""அது சரி! நீயோ புலி! உன்னிடத்தில் எனக்கு நம்பிக்கை வேண்டுமே?''</div>
<div style="text-align: justify;">
<br />""நானே கிழப்புலி... எனக்குப் பல்லும் கிடையாது, நகமும் கிடையாது. இன்னும் என் மீது நம்பிக்கை இல்லையா? வேண்டாம் என்றால் போ!'' என்றது.</div>
<div style="text-align: justify;">
<br />""நீ சொல்வதெல்லாம் சரிதான்! இருந்தாலும், புலி பொல்லாதது! ஆளை பார்த்ததும் கொன்றுவிடும் என்று சொல்கிறார்களே! அதற்கு என்ன சொல்கிறாய்?''</div>
<div style="text-align: justify;">
<br />""ஏதோ வறுமையில் வாடுபவனாய்த் தெரிந்தது. அதனால், உனக்கு இந்தப் பொன் காப்புகளைக் கொடுக்கத் தீர்மானித்தேன். இஷ்டம் என்றால் வாங்கிக்கோ. இல்லையென்றால் போய்விடு!''</div>
<div style="text-align: justify;">
<br />அதுகேட்ட மனிதனுக்கு, மனம் குளிர்ந்தேவிட்டது. பேராசை யாரை விட்டது? அந்தப் புலியோ, தேனொழுகப் பேசியது! பிறகு நம்பாமல் இருக்க முடியுமா?</div>
<div style="text-align: justify;">
<br />உடனே ஏரியில் இறங்கினான். பாதியில், அங்கிருந்த உளையில் அகப்பட்டுக்கொண்டு விழித்தான். ஒரு காலைத் தூக்க முயற்சித்தான். மற்றொரு கால் உள்ளே போய்க் கொண்டிருந்தது! பாவம்! அவன் என்ன செய்வான். "உளையில் மாட்டிக்கொண்டு விட்டேனே!' என்று தவித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br />அதுகண்ட புலி, ""பயப்படாதே! இதோ நான் வருகிறேன். உன்னை அந்த உளையிலிருந்து காப்பாற்றுகிறேன்!'' என்று சொல்லிக்கொண்டே அவன் மேல் பாய்ந்து அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.</div>
<div style="text-align: justify;">
<br />அப்போது அந்தப் மனிதன்... "துஷ்டனின் துஷ்ட சுபாவம் மாறாது' என்பதை எண்ணியபடியே உயிரை விட்டான். ஆகையால், நாம் எதையும் மிகவும் ஆழ்ந்து யோசனை செய்த பிறகே செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், நமக்கு ஒரு தீங்கும் ஏற்படாது!'' என்று கூறி முடித்தது அந்தப் புறா அரசன்.</div>
<div style="text-align: justify;">
<br />ஆனால், அதுகேட்ட மற்ற புறாக்கள் சிணுங்கின. ""ஆமாம். இப்படியெல்லாம் யோசித்தால், நமக்கு ஒரு இரையும் அகப்படாது. மேலும், தீராத சந்தேகம் உள்ளவன், பெரும் துக்கத்தையே அனுபவிப்பான்,'' என்று சொல்லிக்கொண்டே, அத்தானியத்தைத் தின்ன கீழே இறங்கின.</div>
<div style="text-align: justify;">
<br />புறா எவ்வளவோ தடுத்தும் கேட்காமல், அவ்வரிசியைக் கொத்தித் தின்னத் தொடங்கின. அப்போது, புறாக்கள் அனைத்தும் அவ்வலையில் சிக்கிக் கொண்டன.</div>
<div style="text-align: justify;">
<br />""என் பேச்சைக் கேளாமற் போனீர்களே!'' என்று பெருமூச்சுவிட்டது அப்புறா அரசன்.</div>
<div style="text-align: justify;">
<br />உடனே, "நான் மாத்திரம் தனியாயிருந்து என்ன பயன்!' என்று முணுமுணுத்துக் கொண்டே, கீழே இறங்கி வந்து வலையில் அகப்பட்டுக் கொண்டது.</div>
<div style="text-align: justify;">
<br />இதைக் கண்ட வேடனும், மகிழ்ச்சியுடன் புறாக்களை பிடிக்க வந்தான். அதுகண்ட அரசனும், அதன் பரிவாரங்களும், பெரும் கலக்கம் அடைந்து, இறக்கைகளை அடித்துக் கொண்டு தவித்தன. அடுத்த நொடியில் தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டது புறா அரசன்.</div>
<div style="text-align: justify;">
<br />உடனே மற்ற புறாக்களைப் பார்த்து, ""துன்பம் நேரும் காலத்தில் அறிவை இழப்பது கூடாது. அதிலிருந்து விடுபடவே முயல வேண்டும். அவனே களிப்பு அடைவான்.</div>
<div style="text-align: justify;">
<br />""வேடன் நம்மை அணுகுவதற்கு முன், அனைவரும் ஒரே மனத்துடன், நாம் ஆகாயத்தில் பறக்க வேண்டும். அப்படி அனைவரும் கிளம்பினால், வலையும் பெயர்த்துக்கொண்டு நம்மோடு வந்துவிடும். அதன்பிறகு நாம் எளிதில் தப்பித்துக் கொள்ளலாம்.''</div>
<div style="text-align: justify;">
<br />புறாக்கள் அனைத்தும் அரசன் சொற்படி, ஒரே சமயத்தில் உயரே கிளம்பின. வலையைத் தூக்கிக்கொண்டு அந்த புறாக்கள் ஆகாயத்தில் பறந்த காட்சி வேடன் எதிர்பாராதது. அவர்கள் பின்னால் சிறிது தூரம் ஓடினான். பிறகு, முடியாது என்று தெரிந்து, வலையும் போன சோகத்தில் வீடு திரும்பினான். புறாக்களின் அரசன், எலி நண்பனிடம் சென்று அவனது உதவியால் வலையை கடித்து விடுதலை அடைந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றி சிறுவர்மலர்</div>
</div>
Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com3